Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

போலீசுக்கு நகராட்சி பாராட்டு

Print PDF

தினமலர் 11.01.2010

போலீசுக்கு நகராட்சி பாராட்டு

வாலாஜாபேட்டை:வாலாஜாபேட்டை நகராட்சி சார்பில் இன்ஸ் பெக் டர் சீதாராமுக்கு பாராட்டு விழா நடந்தது.வாலாஜாபேட்டை போக் குவரத்து நெரிசலை கட்டுப் படுத்தவும், விபத்துக் களின்றி பொதுமக்களை பாதுகாக்கவும் நகராட்சி, தேசியநெடுஞ்சாலை துறை, வியாபாரிகளுடன் இணைந்து அனைத்துக் கட்சியினரின் ஒத்துழைப்புடன் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் பேரிகாட் அமைக்கும் பணியை போலீசார் செய்து வருகின்றனர்.

இதற்காக கல்வி நிறுவன ங்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள் நன் கொடை வழங்கி வருகின்றனர். இப்பணிமுடிய மேலும் 500 பேரிகாட் தேவைப்படுகிறது.மேலும் பொங்கலுக்கு பிறகு முழு அளவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நடைபாதைகள் அமைத்து, பேரிகாட் நிறுவும் பணி முழுமையடையும். போலீசாரின் இந்த பணியை பாராட்டும் வகையில் நேற்று நகராட்சிசார்பில் இன்ஸ்பெக்டர் சீத்தாராமை பாராட்டி, அவருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சேர்மன் நித்தியானந்தம் தலைமை வகித்தார். கமிஷனர் பாரிஜாதம் முன்னிலைவகித்தார். இதில் மதிமுக நகர செயவாளர் சுந்தரமூர்த்தி முன்னாள் மாவட்ட காங்., தலைவர் பாலகிருஷ்ணன், நகர காங்., பொதுச் செயலாளர் பூமணி, கவுன்சிலர்கள் ஆறுமுகம், கற்பகம், ரமேஷ், சாதிக்பாஷா, சரவணன் மற்றும் சிவந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.இன்ஸ்பெக்டர் சீத்தாராம் நன்றி கூறினார்.

Last Updated on Monday, 11 January 2010 10:54