Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூய்மை பணிபுரிவோர் வாரியம் தொடக்கம்

Print PDF

தினகரன் 11.01.2010

தூய்மை பணிபுரிவோர் வாரியம் தொடக்கம்

கடலூர் : கடலூர் மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

தூய்மை பணிபுரிவோருக்கு தூய்மை பணிபுரிவோர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பணிகளை தாட்கோ மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாரியத்தின் உறுப்பினர்களாக சேர உறுப்பினர் விண்ணப்பங்களை நகராட்சி ஆணையர், பேரூராட்சி செயல் அலுவலர் மூலம் தாட்கோ, மாவட்ட மேலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஆனால் தற்போது தாட்கோ அலுவலர்களே அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் நேரிடையாக வந்து சிறப்பு முகாம்கள் நடத்தி உறுப்பினர் சேர்க்கை மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறும் விண்ணப்பங்களை அளிக்க உள்ளனர்.

எனவே அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் பணிபுரியும் தூய்மை பணிபுரிவோர் அனைவரும் அவர்களின் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு உரிய படிவங்களை பூர்த்தி செய்து பயனடைய வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது

Last Updated on Monday, 11 January 2010 12:21