Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆற்காடு நகராட்சிபணியாளர்களுக்கு சீருடை வழங்கல்

Print PDF

தினமலர் 13.01.2010

ஆற்காடு நகராட்சிபணியாளர்களுக்கு சீருடை வழங்கல்

ஆற்காடு:ஆற்காடு நகராட்சி பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது.ஆற்காடு நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகராட்சி சேர்மன் ஈஸ்வரப்பன் தலைமை வகித்து, பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கி பேசினார்.நிகழ்ச்சிக்கு, நகராட்சி கமிஷனர் பாரிஜாதம், துணை சேர்மன் பொன்.ராஜசேகரன் முன்னிலை வகித்தனர்.

சுகாதார உதவி ஆய்வாளர் ராஜபாண்டியன் வரவேற்றார்.இந்நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளர் பாக்கியம் மாதவன், உதவி ஆய்வாளர் முருகன், நகராட்சி கவுன்சிலர்கள் பூங்காவனம், ரகுநாதன், கஸ்தூரி, ஜீவமணி, வசந்தி, முன்னாள் கவுன்சிலர்கள் செல்வகணேசன், கோபு, சிவா, சுரேஷ், விவேகானந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 13 January 2010 06:46