Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பத்மநாபபுரம் நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

Print PDF

தினமணி 16.01.2010

பத்மநாபபுரம் நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

தக்கலை, ஜன. 15: பத்மநாபபுரம் நகராட்சியில் தமிழ் புத்தாண்டு மற்றும் சமத்துவ பொங்கல் விழா நகராட்சி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

நகர்மன்றத் தலைவர் அ.ரேவன்கில் தலைமை வகித்தார். ஆணையர் செல்லமுத்து, துணைத் தலைவர் முகமதுசலீம், பொறியாளர் சனல்குமார், சுகாதார அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர்மன்ற உறுப்பினர் கொச்சுகிருஷ்ணபிள்ளை வாழ்த்தி பேசினார். பின்னர் புதுப்பானையில் பொங்கலிடப்பட்டு பொதுமக்களுக்கு பொங்கல் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

பொங்கல் விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற கோலப்போட்டி பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு நகர்மன்றத் தலைவர் ரேவன்கில் பரிசுககளை வழங்கினார்.

நகர்மன்ற உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர் முருகேசன், சுகாதார மேற்பார்வையாளர்கள் மோகன், சிவகுமார், மகப்பேறு உதவியாளர் அன்னகுட்டி, மில்டன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.