தினமலர் 27.01.2010
விக்கிரமசிங்புரம் நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா
விக்கிரமசிங்கபரம்:விக்கிரமசிங்புரம் நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தினவிழாவிற்கு நகராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார். நிர்வாக அதிகாரி முருகன் முன்னிலை வகித்தார். விழாவில் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் நகராட்சி துணை தலைவர் செல்வராஜ், கவுன்சிலர்கள் இசக்கிபாண்டியன், கண்ணன், ஜெயபிரகாஷ் உட்பட நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.