தினமலர் 27.01.2010
நாளை கூடுகிறது மாநகராட்சி கூட்டம்
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நாளை நடக்கிறது. அதில், வீதியில் குப்பை கொட்டினால், அபராதம் விதிக்கும் தீர் மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.கோவையில் நடக்க உள்ள உலகத் தமிழ் செம் மொழி மாநாட்டுக்கு வரும் தமிழர்கள், பனியன் நகரமான திருப்பூருக்கும் வர வாய்ப்புள்ளதால், இந்நகரை தூய்மைப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஈடுபட துவங்கியுள்ளது. முதல் கட்டமாக, வீதியில் குப்பை கொட்ட தடை விதிக்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய் துள்ளது.இந்நிலையில், மாநகராட்சி மாமன்ற கூட்டம் நாளை கூடுகிறது. அக் கூட்டத்தில், தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து கட்சி கவுன்சில் குழு தலைவர்களுடன் மேயர் செல்வராஜ் இன்று ஆலோசிக்கிறார். அதன்பின், மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப் பட உள்ளது.