தினமலர் 28.01.2010
மாநகராட்சி டிரைவர்கள் மொபைல்போனுக்கு தடை
மதுரை: அரசு பஸ்களில், பணியின் போது டிரைவர்கள் மொபைல்போன் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து, மதுரை மாநகராட்சியில் வாகன டிரைவர்கள் பணியின் போது மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்தி விபத்து ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட டிரைவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். விபத்திற்குரிய இழப்பீட்டுத் தொகை, டிரைவர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் என மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் தெரிவித்தார்.