Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வள்ளலார் நினைவு தினம்: 30}ல் இறைச்சிக் கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு

Print PDF

தினமணி 28.01.2010

வள்ளலார் நினைவு தினம்: 30}ல் இறைச்சிக் கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு

கோவை, ஜன.27: வள்ளலார் நினைவு தினத்தையொட்டி வரும் சனிக்கிழமை (ஜன.30) இறைச்சிக் கடைகளை மூட கோவை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கை:

வள்ளலார் நினைவு தினத்தன்று ஆடு, மாடு, கோழி வதை செய்வதும், இறைச்சி விற்பனை செய்வதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, கோவை மாநகராட்சிக்குட்பட்ட இறைச்சிக் கடைகளை மேற்குறிப்பிட்ட நாளில் மூட வேண்டும். அன்றைய தினம் கோவை மாநகராட்சியின் உக்கடம் மற்றும் சிங்காநல்லூர் ஆடு அறுவைமனைகள், சத்தி சாலையில் உள்ள மாடு அறுவைமனை செயல்படாது. இந்த உத்தரவை மீறிச் செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Last Updated on Thursday, 28 January 2010 10:21