Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாநகராட்சியில் உதவி கமிஷனர்கள் அதிரடி மாற்றம்

Print PDF

தினமலர் 29.01.2010

நெல்லை மாநகராட்சியில் உதவி கமிஷனர்கள் அதிரடி மாற்றம்

திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சியில் உதவி கமிஷனர்கள் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

பாளை மண்டல உதவி கமிஷனர் சுல்தானா தச்சை மண்டலத்திறகும், நெல்லை மண்டல உதவி கமிஷனர் (பொறுப்பு) பாஸ்கர் பாளை மண்டலத்திற்கும், பாளை மண்டல உதவி செயற்பொறியாளர் சாந்தி நெல்லை மண்டலத்திற்கும் இடமற்றம் செய்யப்ப்டடனர்.

தச்சை மண்டல உதவி கமிஷனர் (பொறுப்பு) கருப்பசாமி மேலப்பாளையம் மண்டலத்திற்கும், மேலப்பாளையம் மண்டல உதவி செயற்பொறியாளர் சாமுவேல் செல்வராஜ் தச்சை மண்டலத்திற்கும் மாற்றப்பட்டனர். இளநிலை இன்ஜினியர்கள் ராமநாதன், கருப்பசாமி, பைஜூ, பிரதீப்குமார், திருஞானசேகர், தனராஜ், ஜெயகணபதி, பாஸ்கரன், இசக்கி ரமேஷ், சங்கரசுப்பிரமணியன் உட்பட 11 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

கே.டி.சி நகர் குடிநீர் திட்டத்தில் முறைகேடு புகார் தொடர்பாக சஸ்பென்ட் செய்யப்பட்ட 4 இன்ஜினியர்களும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகராட்சி கமிஷனர் பாஸ்கரன் பிறப்பித்தார்.