Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பட்டுக்கோட்டையில் மின் மயானம் அமைக்க பூமி பூஜை

Print PDF

தினமணி 29.01.2010

பட்டுக்கோட்டையில் மின் மயானம் அமைக்க பூமி பூஜை

பட்டுக்கோட்டை, ஜன 28: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் மின் மயானம் அமைப்பதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டை 28-வது வார்டு, ரயில் நிலைய சாலையிலுள்ள நகராட்சி மயானம், ரூ. 55 லட்சம் செலவில் மின் மயானமாக மாற்றப்படுகிறது. இதற்காக, தகன மேடை கட்டப்படவுள்ள இடத்தில் பூமி பூஜை நடத்தப்பட்டது.

இதில், பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் கு.வெ. பாலகிருஷ்ணன், பொறியாளர் எஸ்.ஆர்.என். செந்தில்குமார், உறுப்பினர்கள் சீனி. அண்ணாதுரை, எஸ்.ஏ.ஆர். ரகுராமன், கே.வி.ஆர். திருச்செந்தில், ஆர். வீரையன், எஸ். ஸ்ரீதர், முன்னாள் உறுப்பினர் டி. கோவிந்தராஜ், ஒப்பந்தக்காரர் மாசிலா. நெடுஞ்செழியன், வி.எஸ். நாடிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நகராட்சி உறுப்பினர் ஏ.ஆர். பரமேஸ்வரன் வரவேற்றார். ஏ. முத்துக்குமார் நன்றி கூறினார்.