தினகரன் 03.02.2010
நகராட்சி அலுவலகத்தில் ஆட்சியர் குறைகேட்கிறார்
நாமக்கல்,: நாமக்கல் நகராட்சியில் இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் குறைகேட்கும் முகாம் நடைபெறுகிறது.
நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் இன்று (புதன்) காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சகாயம் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொள்கிறார். எனவே, நாமக்கல் நகராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரை நேரில் சந்தித்து தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்குமாறு நகராட்சி ஆணையர் கந்தசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.