Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திட்டக்குடிக்கு புதிய செயல் அலுவலர் : பேரூராட்சிகள் உதவி இயக்குநர் தகவல்

Print PDF

தினமலர் 04.02.2010

திட்டக்குடிக்கு புதிய செயல் அலுவலர் : பேரூராட்சிகள் உதவி இயக்குநர் தகவல்

திட்டக்குடி: திட்டக்குடி பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலர் நியமிக்கப்படுவார் என பேரூராட்சிகள் உதவி இயக்குநர் தெரிவித்தார். திட்டக்குடி பேரூராட்சி அலுவலகத்திற்கு செயல் அலுவலர் வராததை கண் டித்து கவுன்சிலர் அலெக் சாண்டர் மற்றும் பொதுமக்கள் கடந்த 2ம் தேதி செயல் அலுவலர் அறைக்கு பூட்டு போட்டனர். இதனையடுத்து நேற்று மாலை பேரூராட்சிகள் உதவி இயக்குநர் சடையப்பன் திட்டக்குடி பேரூராட்சி அலுவலகத்தில் நேரில் ஆய்வு மேற் கொண் டார். இதில் அலுவலக பதிவேடுகள், கோப்புகளை சரிபார்த்தார்.

தொடர்ந்து கொசு மருந்து, பினாயில், பிளீச் சிங் பவுடர் ஆகியவற்றை தேவையான அளவிற்கு வாங்கி இருப்பு வைக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் சேர்மன் மன்னன், துணை சேர்மன் கமலி மற்றும் கவுன்சிலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் தற்போது பணியில் உள்ள செயல் அலுவலர் பன்னீர்செல்வத்திற்கு பதிலாக, புதிய செயல் அலுவலர் இரண்டு நாட்களுக்குள் நியமிக்கப்படுவார் என தெரிவித்தார். இதேபோல் பெண்ணாடம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த ஆய்வில், சேர்மன் அமுதலட்சுமி, துணை சேர்மன் காதர், பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்

Last Updated on Thursday, 04 February 2010 06:28