Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிதம்பரம் சாலைகளில் சுற்றி திரிந்த கால்நடைகளுக்கு அபராதம்

Print PDF

தினமலர் 05.02.2010

சிதம்பரம் சாலைகளில் சுற்றி திரிந்த கால்நடைகளுக்கு அபராதம்

சிதம்பரம் : சிதம்பரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றி திரிந்த கால்நடைகளை நகராட்சி அதிகாரிகள் பிடித்து அபராதம் விதித்தனர்.சிதம்பரம் நகராட்சி பகுதியில் முக்கிய வீதிகளான மேலவீதி, கீழ வீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி, எஸ்.பி கோவில் தெரு, மார்க்கெட் பகுதி, காசுக்கடை தெரு உள்ளிட்ட இடங்களில் ஆடு, மாடுகள் மேய்ந்துக்கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தன. இது குறித்து நகராட்சி சார்பில் ஆடு, மாடுகளின் உரிமையாளர்களை பலமுறை கண்டித்தும் பயன் இல்லை. இதனால் நேற்று நகராட்சி கமிஷனர் ஜான்சன் உத்தரவின்பேரில் துப்புரவு ஆய்வாளர் குழந்தைவேலு தலைமையில் நகராட்சி ஊழியர்கள் சாலைகளில் சுற்றி திரிந்த 20 ஆடுகள், 15 மாடுகளை பிடித்து நகராட்சிக்கு கொண்டு வந்தனர்.தகவல் அறிந்த கால்நடை உரிமையாளர்கள் நகராட்சியில் முறையிட்டனர். இனி ஆடு, மாடுகளை சாலை பகுதியில் மேயவிடமாட்டோம் என உறுதியளித்ததன் பேரில் அவர்களிடம் அபராதத்தொகை வசூலித்துக்கொண்டு கால்நடைகளை அனுப்பினர்.

Last Updated on Friday, 05 February 2010 06:37