Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பேனர்களை வைக்க கட்டுப்பாடு: ஆற்காடு நகராட்சியில் தீர்மானம்

Print PDF

தினமலர் 05.02.2010

பேனர்களை வைக்க கட்டுப்பாடு: ஆற்காடு நகராட்சியில் தீர்மானம்

ஆற்காடு: ஆற்காடு நகரில் பேனர்கள் வைப்பதில் கட்டுப்பாடு கொண்டு வரப்படும் என்று நகராட்சி சேர்மன் ஈஸ்வரப்பன் கூறினார். ஆற்காடு நகராட்சி கூட்டத் திற்கு தலைவர் ஈஸ்வரப்பன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பொன்.ராஜசேகரன், கமிஷனர் பாரிஜாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

நந்தகுமார் (பா..): ஆற்காடு நகராட்சியில் அனுமதி பெற்ற திருமண மண்டபங்கள் எத்தனை? அனுமதி இல்லாத திருமண மண் டபங்கள் எத்தனை? அவர்களுக்கு எந்த அடிப்படையில் வரி வசூலிக்கப்படுகிறது. ஆற்காடு பஸ் நிலையம் எதிரில் உள்ள நகராட்சி கட்டடத்தில் உள்ள மதுபான கடை யார் மூலம் விடப்பட்டது.

சேர்மன்: திருமண மண்டபங்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன் வசூலிக்கப்பட்ட வரியை இப்போது, குறிப்பிட்ட சதவீதம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. பஸ் நிலையத் தில் உள்ள மதுபானக்கடை பொதுமக்களுக்கு இடையூராக இருந்தால் அதனை முறைப்படி அப்புறப்படுத்தப்படும்.

செல்வம் (பா..): தலைவர் பெயரை சிலர் தவறாக பயன்படுத்தி பணம் வசூல் செய்கிறார் கள். அவர்களிடம் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

சேர்மன்: என்னைப்பற்றி உங்களுக்கும், பொதுமக்களுக்கும் நன் றாக தெரியும். உறுப்பினர்களின் அறிவுரைப்படி அவர்களிடம் ஜாக்கிரதையாக இருப்பேன்.

செல்வம் (பா..): எனது வார் டில் ரோடு போட டெண்டர் எடுத் தவர் 75 நாளாகியும் இதுவரையில் வேலை ஆரம்பிக்கவில்லை. அடுத்த கூட்டத்திற்குள் வேலை முடியாவிட்டால் அவரை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும். நகராட்சிக்கு கெட்ட பெயர் வருகிறது என்றால் அது பொறியாளரால் தான். மேலும் நகரில் டிஜிட்டல் பேனர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு கட்டுப்பாடு விதிக்கவேண்டும். நகராட்சிக்கு சொந்தமான ஈஸ்வரன் மாளிகையில் உள்ள கடைகளை நகராட்சி அனுமதி இல்லாமல் இடித்து மேலும் மேலும் கட்டடங்கள் கட் டுகிறார்கள் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கமிஷனர்: நகராட்சி கட்டட கடைகளை அனுமதி இல்லாமல் இடிப்பதும், கட்டுவதும் தவறு. உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். �லும் பேனர் வைக்க கலெக் டரிடம் அனுமதி வாங்க வேண் டும். அப்படி வாங்குகிறார்களா என்று இனி விசாரிக்கப்படும்.

துணை சேர்மன்: காந்தி, காமராஜர், அம்பேத்கர், வள்ளுவர் சிலையை சுற்றிலும் பேனர்களை வைத்து சிலைகளை மறைத்து விடுவதால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சேர்மன்: தலைவர்களின் சிலைகளை சுற்றியும் பேனர்கள் வைத்து சிலையை மறைத்து விடுகின்றனர். இது வருத்தத்தை அளிப்பதுடன் கண்டிக்கத்தக்கதும் கூட. அதனால் பேனர்களை வைக்க கட்டுப்பாடு கொண்டு வரப்படும்.

வேண்டா (அதிமுக): எனது வார்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மருத்துவமனை, சத்துணவு கூடம், மேநீர் தேக்க தொட்டிகள் உள்ளது. அங்கு 3 செல்போன் டவர்கள் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது.

பூங்காவனம் (பா..): பஜார், பஸ் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள பிளாட்பாரங்களில் பூக்கடை மற்றும் நடைபாதை, கைவண்டி கடைகள் அதிகம் உள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மாங்காய் மண்டியின் உள்ளே உள்ள இடத்தில் சிசிறு கடைகள் கட்டி குறைந்த வாடகைக்கு விடலாம்.

ரகுநாதன் (அதிமுக): ஆற்காடு பாலாற்றில் இருந்து ஆரணிக்கு செல்லும் குடிநீர் பைப்பில் ஆங்காங்கே தண்ணீர் வெளியேறுகிறது. அந்த இடத்தில் சிலர் கழிவுப் பொருட்களை கொட்டுவதால் அந்த குடிநர் மாசுபடும் நிலை உள்ளது. ஆகவே உடனடியாக அங்கு கழிவுப் பொருள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சித்ரா (திமுக): எனது வார்டில் பொதுக்கழிப்பிடம் உள்ளது. அதை யாரும் பயன்படுத்தாதல் அதனை இடித்துவிட்டு வணிகவளாகம் கட்டிவருவாய்க்கு வழி செய்யலாம்.

நடராஜ் (திமுக) : ஆற்காடு பஸ் நிலையத்தில் காலை வேலையில் தொழிற்சாலைகள் பஸ், கல்லூரி மற்றும் பள்ளி பஸ்கள் ஒரே நேரத்தில் வருவதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. அவர்களிடம் நகராட்சி சுங்கம் வசூல் செய்யப்படுகிறதா? அப்படியென்றால் வசூலிப்பது யார்?

சேர்மன்: வாகனங்களுக்கு சுங்கம் வசூலிக்கும் உரிமை ஏலம் விடப்பட்டதால் ஏலம் எடுப்பவர்கள் வசூலிப்பார்கள். இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டத்தில் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் சிவராத்திரி விழா, மயானக்கொள்ளை விழா நடைபெற இருப்பதால் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள், பாலாற்றில் சீர் செய்யும் பணிகளுக்காக 25 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Friday, 05 February 2010 06:46