தினமலர் 05.02.2010
மக்கள் குறைதீர் கூட்டம் நலத்திட்ட உதவி வழங்கல்
ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் நாள் முகாமில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட கலெக்டர் சகாயம் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்டவை கோரி 300 மனுக்கள் அளிக்கப்பட்டன. அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்தார். தொடர்ந்து தமிழ்நாடு விவசாய நலவாரியம் சார்பில் இயற்கை மரணமடைந்த 4 பேருக்கு தலா 12,500 ரூபாய், இரண்டு பேருக்கு திருமண உதவித்தொகை, 20 பேருக்கு முதியோர் உதவித்தொகை என 26 பேருக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நகராட்சி சேர்மன் ராமதாஸ், துணை சேர்மன் ரங்கசாமி, தாசில்தார் கந்தசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் திருஞானம், வட்ட வழங்கல் அலுவலர் ராஜா, ஆர்.ஐ., பாலசந்திரன், கவுன்சிலர்கள் பாலு, சீனிவாசன், சீரங்கன் உட்பட பலர் பங்கேற்றனர