தினமலர் 08.02.2010
பேரூராட்சி கூட்டம்
நெய்வேலி : நெய்வேலி கெங்கைகொண்டான் தேர்வு நிலை பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் நடந்தது.மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சடையப்பன் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கெங்கைகொண்டான் தேர்வு நிலை பேரூராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டிய அலுவலக கட்டடம், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட வணிக வளாகம் உள்ளிட்டவற்றை வரும் 13ம் தேதி திறக்க முடிவு செய்யப் பட்டது. மேலும் பேரூராட் சிக்கு செலுத்த வேண் டிய சொத்து வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை தாமதமின்றி செலுத்த பொது மக்களுக்கு அறிவுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.