தினமலர் 08.02.2010
1.28 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
ராமநாதபுரம் : நேற்று நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் ஒரு லட்சத்து 28 ஆயிரம் குழந்தைகளுக்கு மருந்து வழங்கப்பட்டது.
முகாமையொட்டி ஒரு லட்சத்து 85 ஆயிரம் சொட்டு பாட்டில்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இதற்காக மாவட்டத்தில் 1152 மையங்களில் 4572 நபர்கள் பணியில் ஈடுபட்டனர். பஸ்ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன், அகதிகள் முகாம் என பல இடங்களில் சொட்டு மருந்துகள் வழங்கப் பட்டன. சுகாதாரத்துறை அலுவலர்கள், அரசுத்துறை பணியாளர்கள் , அங்கன்வாடி பணியாளர்கள் , ரோட்டரி, அரிமா சங்கத்தினரும் முகாம் பணிகளில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரத்தில் நடந்த முகாமை கலெக்டர் ஹரிஹரன் துவக்கி வைத்தார். நகராட்சி கமிஷனர் முஜிபுர்ரகுமான், சுகாதார துணை இயக்குனர் உமாமகேஸ்வரி, நகராட்சி தலைவர் லலிதகலா, துணை தலைவர் ராஜாஉசேன், துப்புரவு அலுவலர் கருணாநிதி, துப்புரவு ஆய்வாளர்கள் ரவிசங்கர், சுரேஷ்குமார், ராஜூ உட்பட பலர் பங்கேற்றனர்.