தினமலர் 08.02.2010
ரூ.20 லட்சத்தில் புதிய அலுவலகம் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
போளூர்: 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய அலுவலக கட்டடம் கட்டுவதற்கு போளூர் பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.போளூர் பேரூராட்சி கூட் டம், தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடந்தது. செ யல் அலுவலர் வாசுதேவன், துணைத் தலைவர் சண் முகம் ஆகியோர் முன்னிலை வகித் தனர். கூட்டத்தில் பேரூராட்சி பழைய அலுவலகத்தை இடி த்துவிட்டு 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய அலுவலக கட்டடம் கட்டுவதற்கு கடந்த மாதம் 21ம் தேதி டெண்டர் விடப்பட்டதை அங்கீகரித்தல், கேடந்த மாதம் 13ம் தேதி 2008-09ம் ஆண்டிற்கான ரூ.22 லட்சம் மதிப்பிலான பின்தங்கிய மண்டல மானிய நிதி பணிகள் டெண்டர் விட ப்பட்டதை அங்கீகரித்தல் , முதியோர் உதவி தொகை பெறும் 360 நபர்களின் பெயர்களை வறுமை கோட்டிற்கு கீழ் வாழும்பட்டியலில் சேர்த்துக்கொள்ளும் தீர்மானத்தை அங்கீகரித்தல் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.