Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நிலக்கோட்டை பேரூராட்சி தலைவருக்கு பாராட்டு

Print PDF

தினமணி 08.02.2010

நிலக்கோட்டை பேரூராட்சி தலைவருக்கு பாராட்டு

வத்தலகுண்டு, பிப். 7: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சித் தலைவருக்கு தி.மு..வினர் மற்றும் பொது மக்கள் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.

நிலக்கோட்டை பேரூராட்சியின் 10-வது வார்டு உறுப்பினராக இருந்தார் வேல்முருகன். இவர், கடந்த வாரம் பேரூராட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். எனவே இவருக்கு, 10-வது வார்டு தி.மு..வினர் மற்றும் பொது மக்கள் சார்பாக பாராட்டு விழா, மணியக்காரன்பட்டியில் நடந்தது.

இந்த விழாவுக்கு, தி.மு.. கிளைச் செயலர் கோவிந்தன் தலைமை வகித்தார். ஒன்றியப் பிரதிநிதி லட்சுமணன், கிராம பிரமுகர்கள் முத்துக்கருப்பன், பாண்டி, முத்துராமன், ஜெயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டு பாராட்டினர். இதில், தி.மு.. நிர்வாகிகள் ஜோசப், சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 08 February 2010 09:44