தினமலர் 09.02.2010
மாநகராட்சி துணை கமிஷனர் இடமாற்றம்
மதுரை:மதுரை மாநகராட்சி துணை கமிஷனராக இருந்தவர் சிவராசு. மூன்று மாதங்கள் இப்பதவியில் இருந்த, மாநகராட்சி வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார். ரிங் ரோடு டோல்கேட்டுகளில் நடந்த முறைகேடுகளை தடுத்து, கண்காணிப்பை பலப்படுத்தினார்.இவர் தற்போது காஞ்சிபுரம் மாவட்ட டி.ஆர்.ஓ.,வாக மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இவருக்குப் பதில் துணை கமிஷனர் இன்னமும் நியமிக்கப்படவில்லை.