Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் மோட்டார் பறிமுதல்

Print PDF

தினமலர் 12.02.2010

குடிநீர் மோட்டார் பறிமுதல்

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், சட்டத்துக்கு புறம்பாக மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. காயத்ரி நகர் இரண்டாவது வீதியில் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்தவரின் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மோட்டார் பறிமுதல் செய்யப் பட்டது.ஊத்துக்குளி ரோடு, காயத்ரி நகர் இரண்டாவது வீதியில் வசிக்கும் பாலசுப்ரமணியம், தனது வீட்டு குடிநீர் இணைப்பில் நேரடியாக மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சி எடுத்தார்; மாநகராட்சி ஊழியர்கள், அங்கு சென்று மோட்டாரை பறிமுதல் செய்து, வீட்டு குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.வீட்டுக்குடிநீர் குழாய் இணைப்பில் நேரடியாக மோட்டார் பொருத்தி, குடிநீரை உறிஞ்சினால், மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு, இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது

Last Updated on Friday, 12 February 2010 07:51