Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மோட்டார் வைத்து உறிஞ்சியதால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினமணி 12.02.2010

மோட்டார் வைத்து உறிஞ்சியதால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திருப்பூர்
, பிப்.11: குழாயில் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சியதை அடுத்து திருப்பூரில் ஒரு வீட்டின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

÷திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் குடிநீர்க் குழாயில் மின்மோட்டார் வைத்து உறிஞ்சப் படுவதால் பெரும்பாலான இடங்களில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படுவதாக புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

÷
அப்போது, திருப்பூர், ஊத்துக்குளி சாலை, காயத்ரி நகர், 2-வது வீதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் வீட்டில் குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த மின்மோட்டாரை பறிமுதல் செய்த அதிகாரிகள் குடிநீர் இணைப்பை யும் துண்டித்தனர்.

÷பொதுமக்கள் இதுபோல் குடிநீர்க் குழாயில் மோட்டார் வைத்து உறிஞ்சுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Last Updated on Friday, 12 February 2010 10:28