Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தனலட்சுமி நகரில் ரூ.10 லட்சத்தில் பூங்கா துணை மேயர் கார்த்திக் தொடங்கி வைத்தார்

Print PDF

மாலை மலர் 12.02.2010

தனலட்சுமி நகரில் ரூ.10 லட்சத்தில் பூங்கா துணை மேயர் கார்த்திக் தொடங்கி வைத்தார்

கோவை, பிப். 12-

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 10-வது வார்டு தனலட்சுமி நகரில் ரூ.10 லட்சம் செலவில் பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்கான பணி இன்று தொடங்கியது.

இதனை துணை மேயர் கார்த்திக் தொடங்கி வைத்தார். கவுன்சிலர் தன்ராஜ் முன் னிலை வகித்தார். உதவி பொறியாளர் கலாவதி, குடியிருப்போர் நல சங்க தலைவர்கள் பரமசிவம், பிரகாசம், ஸ்ரீராம், ராமு, மணி, சாமிநாதன், வேணுகோபால், பழனிச்சாமி, ரங்கநாயகி, கொடுமுடி ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.

இதேபோல் 6-வது வார்டு சிங்கை நகரில் ரூ.25 லட்சம் செலவில் பூங்கா அமைக்கப்படுகிறது. இந்த பணியையும் துணை மேயர் கார்த்திக் தொடங்கி வைத்தார். கிழக்கு மண்டல தலைவர் எஸ்.எம்.சாமி முன்னிலை வகித்தார்.

உதவி நிர்வாக பொறி யாளர் பார்வதி, நண்பர்கள் நல சங்க தலைவர்கள் சபாபதி, சுப்பிரமணியம், இனமுருகு, நிஜாம், வட்ட செயலாளர் சிங்கை ராமு, வேலுமணி, இளங்கோவன், நடராஜ், நித்யானந்தம், சுந்தர்ராஜ், ஆறுமுகம், கோவிந்தராஜ், சரவணன், கே.பி.சுந்தர்ராஜ் கலந்து கொண்டனர்.