தினமலர் 17.02.2010
விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சாதாரண கூட்டம் நடந்தது.
விக்கிரமசிங்கபுரம்:விக்கிரமசிங்கபுரம் நகராட்சியின் சாதாரண கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி முருகன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் தேங்கி கிடக்கும் குப்பைகள், இதனால் ஏற்படும் கொசு உற்பத்தி மற்றும் பாதிப்புகள், சகாதர பணியில் ஏற்படும் மந்தமான நிலை, வசூல் ஆகாத தண்ணீர் பணம் வசூலில் ஏற்படும் பிரச்சனைகள், இதில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காதது போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.மேலும் மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் விற்பனை செய்வதை தடைசெய்ய அமுல்படுத்த கோரியும், மீறி விற்பனை செய்வர்கள் மற்றும் பயன்படுத்துவோர்களுக்கு அபராதம் விதிக்கவும். இதுகுறித்து வரும் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். நகராட்சி துணை தலைவர் செல்வராஜ் நன்றி கூறினார்.