தினமலர் 18.02.2010
கடலூரில் கொசு தொல்லை : நகராட்சி தீவிர நடவடிக்கை
கடலூர் : கடலூர் நகரில் பெருகி வரும் கொசுவை ஒழிக்க நகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடலூர் நகரத்தில் நாளுக்கு நாள் கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது. கொசுவை ஒழிப்பதற்காக நகராட்சி சார்பில் 4 லட்சம் ரூபாய் மதிப்பில் கொசு மருந்து வாங்கப் பட்டது. கமிஷனர் குமார் உத்தரவின் பேரில் மாலை நேரத் தில் இயந்திரம் மூலம் ஃபாக்கிங் (புகை மருந்து) செய்யப்பட்டு வருகிறது. காலை நேரத்தில் சாக்கடை கால்வாயில் லார்வா உருவாவதை தடுப்பதற்கு திரவ மருந்து தெளிக்கப்படுகிறது. மேலும் செப்டிக் டேங் கில் இருந்து உருவாகும் கொசு காற்று போக்கிகள் மூலம் பரவுவதை தடுக்க இலவச பை வீடு தோறும் வழங்கப்படுகிறது. சாக்கடை நீர் தேங்கும் இடங்களையும், தேங்குவதற்கு காரணமானவர்களையும் கண்டறிந்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் கொசுவை அறவே ஒழிக்க முடியும்.