தினமலர் 18.02.2010
பேரூராட்சி மன்ற கூட்டம்
சங்கராபுரம் : சங்கராபுரம் பேரூ ராட்சி கூட்டம் தலைவர் முனுசாமி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் சங்கரா புரம் பஸ் நிலையத்திற்கு அருகில் தற்போது வாரச் சந்தை இயங்கும் இடத்தை உழவர் சந்தை அமைக்க தேர்வு செய்து, வாரச் சந்தை இயங்கும் புதன்கிழமை தவிர மற்ற வார நாட்களில் உழவர் சந்தை இயங்கவும், உழவர் சந்தை இயங்க தேவையான கட்ட மைப்பு வசதிகளை செய்து தருவது. சங்கராபுரம் பேரூ ராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்க ளுக்கு சீருடைகள், காலணிகள், சோப்புகள் வழங்குவது. சங்கராபு ரம் ஆற்றுப் பாதை தெருவில் உள்ள பிரதான நீரேற்றும் குடிநீர் குழா யில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விநி யோகம் பாதிப்பதால் சரி செய்வது. சங்கராபுரம் வள்ளலார் நகர், இந்திரா நகர், பூட்டை ரோடு பகுதிக்கு மயானம் அமைக்க சங்கராபுரம் கல்லுக்கட்டி ஏரி குன்று புறம்போக்கில் 4 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து தரும்படி கலெக்டரை கேட்டுக் கொள்வது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது