Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

15 மாநகராட்சி கடைகளுக்கு பூட்டு

Print PDF

தினமலர் 19.02.2010

15 மாநகராட்சி கடைகளுக்கு பூட்டு

மதுரை:பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாத 15 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டினர்.மதுரையில் அனுமதி பெற்ற இரண்டு ஆயிரம் கடைகள் இருக்கின்றன. இவற்றில் சில கடை உரிமையாளர்கள், பல ஆண்டுகளாக வாடகை செலுத்தவில்லை. இப்படியே 20 கோடி ரூபாய் சேர்ந்துவிட்டது. மாநகராட்சி வருவாய் உதவி கமிஷனர் ஆர்.பாஸ்கரன் தலைமையில் இக்கடைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர்.கீழமாரட் வீதி, கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் அமைந்துள்ள, 15 கடைகள் 12.5 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளன. மருந்து கடை, பேக்கரி, கருவாட்டுக்கடை போன்றவை இதில் அமைந்துள்ளன. நேற்று இக்கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டினர்.மொத்த பாக்கி 20 கோடி ரூபாயில், கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 15 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.

Last Updated on Friday, 19 February 2010 07:27