தினமலர் 20.02.2010
பேரூராட்சி கூட்டம்
வடமதுரை : வடமதுரை பேரூராட்சி கூட்டம் தலைவர் முத்துலட்சுமி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் கணேசன், துணைத் தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். பேரூராட்சியின் எட்டாவது வார்டில் தாட்கோ மூலம் அமைக்கப்பட்ட சிமென்ட் ரோட்டின் நடுவே அமைந்துள்ள மூன்று மின்கம்பங்கள் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதால் மாற்றி அமைக்கவும், தொட்டையகவுண்டனூருக்கு குடிநீர் விநியோக அகற்ற பைப் லைன் அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.