Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்செந்தார் கோவில் கடற்கரையை அழகுபடுத்த ரூ.4.3 கோடியில் திட்டம்

Print PDF

தினமலர் 20.02.2010

திருச்செந்தார் கோவில் கடற்கரையை அழகுபடுத்த ரூ.4.3 கோடியில் திட்டம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோவில் கடற்கரையை அழகுபடுத்த மத்திய அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் 4.3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. அதன்படி, கடற்கரையில் சிறுவர் பூங்கா, சுகாதார வளாகம், பக்தர்கள் தங்கும் விடுதி, ஹைமாஸ் விளக்குகள் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன. அறநிலையத்துறை மற்றும் பேரூராட்சி சார்பில் நடக்கும் இப்பணிகளை, தூத்துக்குடி கலெக்டர் கோ.பிரகாஷ், நேற்று நேரில் ஆய்வு செய்தார். பணிகளை இரண்டு மாதத்தில் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும், பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து ஓட்டல், லாட்ஜ், திருமண மண்டப உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூட்டம் ஏற்பாடு செய்யப்படும், என தெரிவித்தார். அவ்வாறு, பிளாஸ்டிக் தடை செய்தால், மத்திய அரசிடமிருந்து அடுத்த நிதியாண்டில் சுற்றுலா வளர்ச்சிக்காக கூடுதலாக நிதி பெறலாம், எனவும் கூறினார். ஆர்.டி.., பாக்கியம் தேவ கிருபை, தாசில்தார் இளங்கோ, நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சீனிவாசன், அதிகாரிகள் உடனிருந்தனர

Last Updated on Saturday, 20 February 2010 06:55