Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மக்கள் தொகை கணக்கெடுக்க தற்காலிக ஊழியர்

Print PDF

தினமலர் 22.02.2010

மக்கள் தொகை கணக்கெடுக்க தற்காலிக ஊழியர்

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி பகுதியில், மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிக்காக, கூடுதலாக தற்காலிக பணியாளர்கள் இருவரை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மாநகராட்சி பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி விரைவில் துவக்கப்பட உள்ளது. இப்பணியை கவனிக்க ஒரு இளநிலை உதவியாளர், ஒரு உதவியாளர் என இரண்டு தற்காலிக பணியாளர்களை 2011 ஜூன் 30 வரை 18 மாதங்களுக்கு மட்டும் பணியில் ஈடுபடுத்த, தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் அனுமதி அளித்துள்ளார்.இளநிலை உதவியாளருக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய்; உதவியாளருக்கு மாதம் 12 ஆயிரம் ரூபாய் வீதம் தொகுப்பூதிய சம்பளம் வழங்கப்படும். மாநகராட்சி நிதியில் இருந்து இச்சம்பளம் வழங்கப்பட்டு, பின், அரசிடம் இருந்து இத்தொகையை ஈடு செய்து கொள்ள, வரும் 25ம் தேதி நடக்கும் மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

Last Updated on Monday, 22 February 2010 06:36