தினமலர் 23.02.2010
துப்புரவு பணியாளர் தின விழா
ஓசூர்: ஓசூர் நகராட்சியில் டைட்டான் நிறுவனத்தின் சமுதாய பணியில் விழிப்புணர்வு குழந்தைகள் இயக்கம் சார்பில் துப்புரவு பணியாளர்கள் தின விழா நடந்தது. டைட்டான் நிறுவன அதிகாரி வேணுகோபால் தலைமை வகித்தார். நகராட்சி துணை தலைவர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவர் சத்யா, துப்புரவு பணியாளர்ளை பாராட்டி இலவச ஸ்வெட்டர்கள் மற்றும் ரோஜா மலர்களை வழங்கினார். கவுன்சிலர்கள் குமார், ரமேஷ், சீனிவாசன், இந்திராணி, துப்புரவு ஆய்வாளர்கள் தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.