Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சித் தேர்தல்: அரசு மனு தள்ளுபடி

Print PDF

தினமணி 23.02.2010

மாநகராட்சித் தேர்தல்: அரசு மனு தள்ளுபடி

பெங்களூர், பிப்.22: பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தலை நடத்த கால அவகாசம் கோரி அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவகாசம் வேண்டுமானால் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளது.

÷பெங்களூர் மாநகராட்சித் தேர்தலை மார்ச் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பள்ளி, கல்லூரிகள் தேர்வு, சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் இருப்பதால் மார்ச் 30-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க முடியாது.

எனவே, தேர்தலை நடத்த 2 மாதம் கால அவகாசம் வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அரசு சிறப்பு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

÷அந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வந்தது. அந்த மனு மீண்டும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கால அவகாசம் கோரி அரசு தாக்கல் செய்த மனுவை அந்த பெஞ்ச் தள்ளுபடி செய்தது. ÷

நீதிபதிகள் கூறியதாவது: பள்ளித் தேர்வு என காரணம் காட்டி தேர்தலை மீண்டும் மீண்டும் ஒத்திவைப்பதை ஏற்க முடியாது. தேவையானால் தேர்வை ஒத்திவைத்துக் கொள்ளுங்கள். தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிட முடியாது.

÷ இந்த வழக்கில் ஏற்கெனவே பலமுறை இந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீண்டும் உச்ச நீதிமன்றத்துக்கு வரத் தேவையில்லை. கால அவகாசம் வேண்டுமானால்,

உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து அவகாசம் பெற்றுக் கொள்ளலாம். அதற்கு உச்ச நீதிமன்றம் ஆட்சேபனை தெரிவிக்காது என்று அரசு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

முதல்வர் கருத்து: பெங்களூர் மாநகராட்சித் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகல் கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தலை நடத்த அரசு எப்போதும் தயாராகவே உள்ளது. ஆனால் சில காரணங்களால் தேர்தலை நடத்த முடியாமல் தள்ளிப்போகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவு மீது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அரசு செவ்வாய்க்கிழமை முடிவு எடுக்கும் என்றார். அமைச்சர் அசோக் கருத்து: அரசு தாக்கல் செய்த மனு மீது உயர் நீதிமன்றத்துக்குச் செல்லும்படிதான் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனவே, உயர்நீதிமன்றத்தில்

கால அவகாசம்கேட்டு மனு செய்வோம். தற்போது சி.பி.எஸ்.. போன்ற கல்வித் திட்டத் தேர்வுகள் துவங்கிவிட்டன. எனவே, தேர்வை ஒத்திவைக்க இயலாது. இதை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து கால அவகாசம் கேட்போம். உயர் நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளிக்கிறதோ அதை செயல்படுத்துவோம் என்றார்.

காங்கிரஸ் கருத்து: காங்கிரஸ் தலைலவர்களான முன்னாள் மேயர்கள் ராமச்சந்திரப்பா, ரமேஷ் ஆகியோர் கூறியதாவது: பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் பல்வேறு கட்டங்களில் அரசுக்கு கண்டனம் தெரிவித்து தேர்தலை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளது. ஆனால் அரசு தேர்தலை தள்ளிவைக்க உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மாறி, மாறி மனுத்தாக்கல் செய்து வருகிறது.

அப்படியிருந்தும் அரசின் மனுவை ஏற்க நீதிமன்றங்கள் தயாரில்லை. இனி எந்த முகத்தோடு அரசு நீதிமன்றத்துக்குச் செல்லும் என்று பார்ப்போம். தேர்தலை நடத்தி முடிக்கும்வரை ஓய மாட்டோம் என்றனர்.

Last Updated on Tuesday, 23 February 2010 10:15