Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

டீத்தூள் கலப்படம் குறித்து கடைகளில் ஆய்வு

Print PDF

தினமலர் 24.02.2010

டீத்தூள் கலப்படம் குறித்து கடைகளில் ஆய்வு

காரிமங்கலம்: காரிமங்கலம் பகுதியில் உள்ள கடைகளில் டீத்தூள் கலப்படம் குறித்து சுகாதார துறையினர் திடீர் ஆய்வு செய்தனர். காரிமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன் மற்றும் காரிமங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஜெகன்மோகன் ஆகியோர் தலைமையில், காரிமங்கலம் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலையில் உணவு ஆய்வாளர் நாகராஜன், சுகாதார ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் கோபிநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் காரிமங்கலம் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், கலப்பட டீத்தூள் மற்றும் தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தி முதலிய விபரங்கள் இல்லாத 2 கிலோ டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டன. டீத்தூள் மாதிரி சேகரிக்கப்பட்டு உணவு பகுத்தாய்வு கூடத்துக்கு அனுப்பி சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. போலி டீத்தூள் பயன்படுத்துவது குறித்து கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டன.

Last Updated on Wednesday, 24 February 2010 06:52