Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆற்காடு நகராட்சி:திட்டக்குழு கூட்டம்

Print PDF

தினமலர் 24.02.2010

ஆற்காடு நகராட்சி:திட்டக்குழு கூட்டம்

ஆற்காடு: ஆற்காடு நகராட்சியின் உள்ளூர் திட்டக்குழு உறுப்பினர்களின் கூட்டம் அதன் தலைவர் ஈஸ்வரப்பன் தலைமையில் நடந்தது.இதில், நகராட்சி கட்டட ஆய்வாளர் சியாமலதா, கவுன்சிலர் மற்றும் உள்ளூர் திட்டக்குழு உறுப்பினர்கள் சண்முகம், பாரத், சித்ரா, வெற்றிவேல், தமிழ்ச்செல்வி, கோபி, செல்வி, கருணா, கஸ்தூரி, ஆகியோர் கலந்து கொண்டனர். தீர்மானங்கள்: ஆற்காடு நகரில் 29 வீடுகள், 4 கடைகள் கட்ட அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதனை பரிசீலனை செய்து ஒப்புதல் அளிக்கப்படும். கட்டடங்கள் கட்ட அனுமதி கேட்டு மனு செய்பவர்கள் அனைத்து ஆவணங்களுடன் நகராட்சி தகவல் மையத்தில் மட்டுமே கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கும் மனுக்கள் பரிசீலனை செய்து 30 நாட்களுக்குள் ஒப்புதல் அளிப்பது, தவறும் பட்சத்தில் இது சம்பந்தமாக நகராட்சி சேர்மனிடம் விவரம் கேட்டு அறியலாம் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Last Updated on Wednesday, 24 February 2010 07:11