Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மார்த்தாண்டம் பகுதியில் 50 கிலோ போலி தேயிலைத் தூள் பறிமுதல்

Print PDF

தினமணி 24.02.2010

மார்த்தாண்டம் பகுதியில் 50 கிலோ போலி தேயிலைத் தூள் பறிமுதல்


மார்த்தாண்டம், பிப். 23: மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதி கடைகளில் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட ஆய்வில் 50 கிலோ போலி தேயிலைத் தூள் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மதுசூதனன் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர்கள் ஜெயகுமார், செல்வன், ரஞ்சித்சிங் உள்ளிட்ட அதிகாரிகள் மார்த்தாண்டம், பம்மம், உண்ணாமலைக்கடை,கருங்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டீக் கடைகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் பெரும்பாலான கடைகளில் போலி தேயிலைத் தூள் பயன்படுத்தி வருவது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் பல்வேறு கடைகளில் இருந்து 50 கிலோ போலி தேயிலைத் தூளை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்

Last Updated on Wednesday, 24 February 2010 10:37