Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சத்திரம் பஸ் ஸ்டாண்டு பணிகள்: மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

Print PDF

தினமலர் 25.02.2010

சத்திரம் பஸ் ஸ்டாண்டு பணிகள்: மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

திருச்சி: திருச்சி மாநகராட்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் நடந்து வரும் மேம்பாட்டுப் பணிகளை மாநகராட்சி மேயர் சுஜாதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். சத்திரம் பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சி பொது நிதி 50 லட்சம் ரூபாய் செலவில் பஸ் பயணிகளுக்கு நடைபாதையுடன் கூடிய நவீன நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

நிழற்குடை அமைத்த பகுதியில் தற்போது 13 லட்சம் ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை மாநகராட்சி மேயர் சுஜாதா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின், திருவானைக்கோவில் தெற்கு உள்வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு வேண்டும் என மேயரிடம் கடந்த வாரம் கோரிக்கை விடுத்தனர். அந்த இடத்தை நேரில் சென்றுபார்வையிட்டு, நடவடிக்கை எடுக்கும்படி பொறியாளர்களை அறிவுறுத்தினார். கீழகொண்டையம்பேட்டை குடியிருப்பு பகுதிக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்க கோரிக்கை வைக்கப்பட்ட இடத்தையும் மேயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, செயற்பொறியாளர் அருணாச்சலம், கோட்டத் தலைவர் குமரேசன், உதவி கமிஷனர் நடராஜன், உதவி செயற்பொறியாளர் பாலகுருநாதன், கவுன்சிலர் விஜயலெட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர

Last Updated on Thursday, 25 February 2010 07:03