தினகரன் 01.11.2010
பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிய தகவல் மையம் திறப்பு புகார் தெரிவித்தால் நடவடிக்கை
பெரம்பலூர், நவ. 1: பிறப்பு, இறப்பு பதிவு செய்ய பெரம்பலூர் நகராட்சியில் தகவல் மையம் இன்று திறக்கப்படுகிறது. தகவல் மையத்தில் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படுமென நகராட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பா ண்டு பெரம்பலூர் மாவ ட் டத்தில் 121 ஊராட்சி, பெர ம்பலூர், ஆலத்தூர், வேப் பூர், வேப்பந்தட்டை ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்கள், குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லப்பைக்குடி காடு ஆகிய 4பேரூராட்சி கள், ஒரு மாவட்ட ஊராட்சி உள்ளிட்ட 130 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளாட்சி தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி நான் கரை ஆண்டுகளில் செய்து முடிக்கப்பட்டுள்ள சாதனை பட்டியல்கள் நகரின் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதுபற்றி நகரா ட்சி தலைவர் இளையராஜா கூறியதாவது:
உள்ளாட்சி தினவிழாவையொட்டி பெரம்பலூர் நகராட்சியில் தகவல் மையம் திறக்கப்படுகிறது. இதில் பிறப்பு இறப்பு சான் றிதழ் பதிவு செய்தல், வீட்டுமனைகளுக்கு அனுமதி பெறுதல், சொத்து வரிவிதி ப்பு, காலிமனை வரிவிதிப்பு, குடிநீர் இணைப்பு கட்டிட அனுமதி, பாதாள சாக்கடை திட்ட இணைப்பு குறித்து விண்ணப்பிக்க வசதியாக நகராட்சி அலுவலகத்தில் இந்த தகவல் மையம் நவம் பர் 1 முதல் செயல்பட உள் ளது. இந்த தகவல் மையத் தில் புகார்களை தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள் ளது.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை ஆகிய 21 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் இங்குள்ள 04328& 277185 என்ற தொலைப்பேசி எண் ணில் தொடர்பு கொண்டு, தங்கள் பகுதியில் குடிநீர் பிரச்னை, தெருவிளக்கு பிர ச்னை, சுகாதார பிரச்னை உள்ளிட்ட அடிப்படை வசதி குறைபாடு குறித்து புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தினவிழாவையொட்டி, நகராட்சி துப்புரவு பணியாளர்கள் பங்கேற்கும் சுகாதார விழிப்புணர்வு பேரணி நடக்கிறது. 2ம் தேதி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் பங்கேற்கும் சுகாதார விளையாட்டு போட்டி நடைபெறுகிறது என்றார்.
இதேபோல் ஒன்றியங் கள், பேரூராட்சி அலுவலகங்களில் உள்ளாட்சி தின விழா கொண்டாடப்படவுள்ளது. நிகழ்ச்சிகளில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்கின்ற னர்.