Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சில்லரை சச்சரவுக்கு தீர்வு பஸ் பயணத்துக்கு ரீசார்ஜ் கார்டு

Print PDF

தினகரன்                     29.10.2010

சில்லரை சச்சரவுக்கு தீர்வு பஸ் பயணத்துக்கு ரீசார்ஜ் கார்டு

பெங்களூர், அக். 29:பஸ்களில் சில்லரை பிரச்னைக்கு தீர்வுகாண காமன் மொபைலிட்டி கார்டுஎனும் ரீசார்ஜ் கார்டு திட்டம் பெங்களூரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால் பயணிகளுக்கும், கண்டக்டர்களுக்குமிடையேயான சில்லரை சச்சரவுகள்இனி வரவாய்ப்பில்லை.

நாட்டில் முதன்முறையாக பஸ்களில் இணையதள வசதி பெங்களூரில் அறிமுகப்படுத்தப்பட்டது. சில்லரை சச்சரவுக்கு தீர்வுகாண்பதற்காக கார்டுதிட்டம் விரைவில் அறிமுகமாகவுள்ளது. ‘காமன் மொபைலிட்டி கார்டுஎன்பது பார்ப்பதற்கு வங்கி ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டுபோல இருக்கும். இந்த கார்டுகளுக்கு செல்போன்போல ரீசார்ஜ் செய்ய வேண்டியது அவசியமாகும். பஸ்சில் பயணிக்கும்போது கார் டை நடத்துனரிடம் அளித்தால் அவரிடமுள்ள ஸ்வைப் இயந்திரத்தில் கார்டை உரசி பயணி செல்ல வேண்டிய தூரத்திற்கு எவ்வளவு கட்டணமோ அதற்குரிய பணம் கழித்துக்கொள்ளப்படும்.

கார்டில் பணம் குறைந்துவிட்டால் மறுபடியும் ரீசார்ஜ் செய்து பயணி அதை பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்காக பெங்களூரில் 100 மையங்கள் திறக்கப்பட உள்ளன. மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போது இந்த கார்டு மூலமாக டிக்கெட் கட்டண த்தை அளிக்கலாம். வாகன பார்க்கிங் பகுதிகளிலும் இதே கார்டைகொண்டு பணம் செலுத்தலாம்.போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் இதுகுறித்து கூறும்போது, "மத்திய அரசு இத்திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. நாட்டிலேயே முதலில் பெங்களூர் நகர பஸ்களில் இத்திட்டத் தை அமல்படுத்துமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கார்டில் உள்ள சிப் பை மத்திய அரசு அளிக்கும் என்பதால் வருங்காலங்களில் இதே கார்டை பயன்படுத்தி நாட்டின் எந்த பகுதியிலும் பஸ் பயணத்தை மேற்கொ ள்ள முடியும். முதல்கட்டமா க ரூ.16 கோடி செலவில் பெங்களூரின் 1000 பஸ்களில் இந் த கார்டுகள் மூலம் பயணம் செய்யும் வசதி செய்துகொடுக்கப்படும்.

நகர பஸ்களில் நடத்துநர்கள் சிலர் டிக்கெட் வினியோகிக்காமலேயே பயணிகளிடமிருந்து சிறிதளவு பணத்தை பெற்றுக்கொண்டு பயணிக்க அனுமதிக்கின்றனர். இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. ‘காமன் மொபைலிட்டி கார்டுதிட்டத்தால் இதுபோன்ற முறைகேடு தடுக்கப்படும்.

எலக்ட்ரானிக் முறையில் எப்.சி:வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் (எப்.சி) அளிக்கும்போது இனிமேல் அதிகாரிகள் தலையீடு இன்றி முழுவதும் எலக்ட்ரானிக் முறையில் வாகனங்களை சோதனை நடத்தும் திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம். தற்போது பெங்களூர் மல்லத்தஹள்ளியில் முற்றிலும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் வழங்கும் மையம் திறக்கப்பட்டுள் ளது. அதிகாரிகள் தலையீடு இன்றி கம்ப்யூட்டர்கள் மூலமாகவே ஓட்டுநர்களின் திறமையை மதிப்பு செய்யும் இத்திட்டத்தை தமிழகம், குஜராத், ராஜஸ்தான் மாநில போக்குவரத்து அதிகாரிகள் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.இவ்வாறு அசோக் தெரிவித்தார்.

 

மாநகராட்சியில் புதிய கட்டடம்: மேயர் .விளக்கம்

Print PDF

தினமலர் 29.10.2010

மாநகராட்சியில் புதிய கட்டடம்: மேயர் .விளக்கம்

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சியில் கட்டட அனுமதி வழங்குவது குறித்து மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் அளித்துள்ள விளக்கம் வருமாறு:

மாநகராட்சி சட்டம் மற்றும் விதிகளின் படி மாநகராட்சி எல்கைக்குள் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கோ அல்லது இருக்கின்ற கட்டடங்கள் விரிவாக்கம் செய்யவோ சில விதிமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. கட்டட விண்ணப்பத்திற்கு விண்ணப்பிக்கும் போது மனுதாரர்கள் பின்பற்ற வேண்டிய சில வழிகாட்டுதல் முறைகள் வெளியிடப்பட்டது. இதுகுறித்து கடந்த 26ம் தேதி நடந்த மாமன்ற கூட்டத்தில் சில வழிகாட்டு முறைகள் பொதுமக்கள் நலன் கருதி தளர்வு செய்யலாம் என கோரிக்கை விடுத்தனர். அந்த வழிகாட்டு முறைகள் குறித்து உரிமம் பெற்ற கட்டட பட வரைவாளர் சங்க பிரதிநிதிகள் மேயரிடம் தங்களது கோரிக்கை குறித்து விவாதித்தனர். அதன்படி மண்டல தலைவர்கள் சுப.சீத்தாராமன், விஸ்வநாதன், சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் பேபிகோபால், அப்துல்வகாப், அதிமுக கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணன், தங்கராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர். அதன்படி பொதுமக்கள் நலன்கருதி அனுமதிபெற்ற மனைப்பிரிவுகளுக்கு தாசில்தாரிடமிருந்து தடையின்மை சான்று, விஏஓ பரிந்துரை சான்று, அடங்கல், டவுன் சர்வே ஸ்கேட்ச் ஆகியவை மனுவோடு சமர்ப்பிக்க தேவையில்லை. மனுவோடு நில உரிமைக்குரிய ஆவணத்தின் நகலில் மனுதாரர் ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்திடவேண்டும். அதில் நோட்டரி அட்வகேட் கையெழுத்து பெறவேண்டிய அவசியம் இல்லை. கட்டட இடம் குறித்து தாவா இருந்தால் மட்டுமே மனுதாரர் அரசு வக்கீலிடம் கருத்துரு பெற்றுத் தரவேண்டும். விதிமுறைகளின் படி சூரிய அடுப்பு 1500 .அடி மேலுள்ள கட்டடத்திற்கு வரைபடத்தில் காட்டப்படவேண்டும். புதிய குடிநீர் திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்ற 1, 2, 3, 4, 8, 9, 10, 19, 26, 27 மற்றும் 31 மற்றும் 32 பாகம் ஆகிய இடங்களில் புதியதாக வீடு கட்ட மனு செய்பவர்கள் குடிநீர் இணைப்பு பெறுவதற்கு சம்மத கடிதம் தரவேண்டும். அதற்குரிய வைப்புத் தொகையையும் செலுத்தவேண்டும்.

கட்டட வரைபடங்களுக்கு அனுமதி வழங்குவதில் தாமதத்தை தவிர்ப்பதற்கு ஏற்கனவே கிரீன் சேனல் முறைப்படி ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை காலை மேயர், மாநகராட்சி அலுவலக்தில் வரைபட அனுமதிக்கான மனுக்களை பெறுகிறார். அன்றே உரிய அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டு ஆவணங்களை சரிபார்த்து மறுநாள் செவ்வாய் கிழமை காலை பொதுமக்களிடம் மனு பெறவரும் போது ஏற்கனவே கொடுத்த மனுக்களுக்கான கட்டட வரைபட அனுமதியை வழங்குகிறார். இந்த முறையில் 24 மணி நேரத்திற்குள் கட்டட அனுமதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 401 கட்டட அனுமதி விண்ணப்பம் பெறப்பட்டு கட்டட அனுமதி பெறப்பட்டு உடனடியாக 397 கட்டட விரும்புவோர்கள் திங்கள் கிழமை தோறும் மேயரிடம் நேரில் கட்டட வரைபடத்திற்கான மனு ஆவணங்களை தந்து 24 மணி நேரத்திற்குள் அனுமதியை பெற்றுக் கொள்ளவேண்டும்.கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்திற்கு வரிவிதிப்பு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது என்ற புகார் அடிக்கடி எழுப்பப்பட்டது. எனவே சென்ற மாதம் முதல் புதியதாக கட்டடம் கட்டியதும் கட்டட உரிமையாளர்கள் உரிய படிவத்தில் விபரங்களை பூர்த்தி செய்து மைய அலுவலகத்தில் சமர்பித்து உடனடி வரிவிதிப்பு உத்தரவு பெறலாம். மாநகராட்சி அதிகாரிகள் அதை சரிபார்த்து அதில் ஏதேனும் தவறு இருந்தால் அதற்குரிய அதிக பணத்தை வரியாக விதிப்பர். எனவே மாநகரத்தில் உள்ள மக்களுக்கு மாநகராட்சியின் அனைத்து சேவைகளும் உரிய நேரத்தில் சென்றடைய வேண்டும் என்பதில் மேயர் என்ற முறையில் நான் உறுதியாக இருக்கிறேன்.எனவே கட்டடம் கட்டுபவர்கள் மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடித்து தாமதமின்றி கட்டட வரைபடங்களுக்கான அனுமதியையும், வரிவிதிப்பையும் பெற்றிட பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.இவ்வாறு மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

 

மக்கி போகிறது நகராட்சி வாகனங்கள்

Print PDF

தினமலர்              29.10.2010

மக்கி போகிறது நகராட்சி வாகனங்கள்

தாம்பரம் : தாம்பரம் நகராட்சி வளாகத்தில் பழுதடைந்த கார், வேன், லாரி ஆகிய வாகனங்கள் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் துருப்பிடித்து எந்த பயனும் இல்லாமல் போவதற்குள், அவற்றை ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகராட்சி அதிகாரிகள் பயன்படுத்தி வரும் வாகனங்கள், இயக்க முடியாத அளவிற்கு பழுதடைந்து விட்டால், அவை ஓரம் கட்டப்படும். இதுபோன்ற வாகனங்கள், நகராட்சி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. பின், அவை ஏலத்தில் விடப்படும். ஆனால், தாம்பரம் நகராட்சி அதிகாரிகள் பயன்படுத்தி, பழுதடைந்த கார், வேன், லாரி, ஜீப் போன்ற 15 வாகனங்கள் நகராட்சி வளாகத்திலும், அம்பேத்கர் திருமண மண்டபத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு பல லட்ச ரூபாய்.பல ஆண்டுகளாக இந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அவற்றில் உள்ள முக்கிய பாகங்கள் துருப்பிடித்துள்ளன. டயர்கள் மக்கி போய் விட்டன. வாகனத்தில் எஞ்சியுள்ள சில பொருட்கள் திருடு போய் விடுகின்றன. மொத்தத்தில், அந்த வாகனங்கள் எதற்கும் பயனின்றி, மண்ணோடு மண்ணாக மக்கி வருகின்றன.மேலும், அந்த வாகனங்களால், மற்ற வாகனங்கள் நிறுத்த முடியாமல் போய் விடுகிறது. பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை ஏலத்தில் விட்டால், நகராட்சிக்கு வருமானம் கிடைக்கும். மக்கள் வரிப்பணம் மீதமாகும். எனவே, மக்கிக் கொண்டிருக்கும் வாகனங்களை உடனடியாக ஏலத்தில் விட, தாம்பரம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 


Page 339 of 841