Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

கட்சி விளம்பரத்தைக் கட்டுப்படுத்த மாநகராட்சிக்கு அதிகாரம் இல்லை

Print PDF

தினமணி                  28.10.2010

கட்சி விளம்பரத்தைக் கட்டுப்படுத்த மாநகராட்சிக்கு அதிகாரம் இல்லை

திருப்பூர், அக். 27: கட்சிகளின் விளம்பரங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு இல்லை என்று, திருப்பூரிலுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

கட்சி விளம்பரத் தட்டிகள், பேனர்கள் வைப்பதற்கு தனியாக இடம் ஒதுக்கி ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட திருப்பூர் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. வியாழக்கிழமை நடைபெறும் மாநகராட்சி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மாமன்ற ஒப்புதலுக்கு வைக்கப்பட உள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்வது தொட ர்பான பிரச்னையில், மாநகராட்சி நிர்வாகம் தலையிடுவது குறித்து அனைத்துக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலர் எம்.ரவி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் வடக்கு நகரச் செயலர் என்.கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சையான இதர ஜனநாயக, பொதுநல அமைப்புகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்துவது, அரசியல் கட்சிகள் கூட்டம் கூட்டும் உரிமை, விளம்பரம் செய்யும் உரிமையைப் பறிக்கும் செயலாகும். அதற்கு மாநகராட்சி நிர்வாகத்துக்கு அதிகாரம் இல்லை. இப்படியான தீர்மானத்தை முன்மொழிவது தவறான முன்னுதாரணம். இந்த முடிவு தொடர்பான அறிக்கையை மாநகராட்சிக்கு அனுப்பவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் தெற்கு மாநகரச் செயலர் எம்.ராஜகோபால், எம்.எஸ்.எம்.ஆனந்தன் (அதிமுக), பரமேஸ்வரி (மதிமுக), சுந்தரராஜன் (காங்கிரஸ்), முஸ்தபா (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

குடந்தை நகராட்சியின் அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய உத்தரவு கோர்ட் ஊழியர்கள் சென்றதால் பரபரப்பு

Print PDF

தினகரன்                28.10.2010

குடந்தை நகராட்சியின் அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய உத்தரவு கோர்ட் ஊழியர்கள் சென்றதால் பரபரப்பு

கும்பகோணம், அக். 28: கும்பகோணம் நகராட்சியின் அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய நேற்று கோர்ட் ஊழியர்கள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 2004ம் ஆண்டு மகாமக திருவிழாவின் போது சிறப்பு நிதி ஒதுக்கீட்டின்கீழ் ஒலைப்பட்டினம் வாய்க்கால் 4 கிமீ தூரம் தூர்வார ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதற்கான டெண்டரை எடுத்து ஒப்பந்ததாரர் தஞ்சையை சேர்ந்த நடேசன் பணி மேற்கொண்டார்.

ரூ.18 லட்சத்திற்கான பணிகளை முடித்து தொகைகேட்டு பில்பட்டியலை ஒப்பந்ததாரர் கும்பகோணம் நகராட்சி இளநிலை பொறியாளரிடம் சமர்ப்பித்தார். பணம் வழங்கப்படாததால் பலமுறை நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டார். இறுதியாக ஒலைப்பட்டினம் வாய்க்கால் தூர் வாரியது தொடர்பாக கோப்பு இங்கில்லை என அதிகாரிகள் கூறினர். இதையடுத்து 2007¢ ஆண்டு நடேசன் தகுந்த ஆதாரத்துடன் தஞ்சை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனக்குரிய பணத¢தை பெற்றுத்தருமாறு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு 2008ம் ஆண்டு தஞ்சை மாவட்ட விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த விரைவுநீதிமன்ற நீதிபதி கடந்த ஜூன் 30ம் தேதி ஒலைப்பட்டினம் வாய்க்கால் தூர்வாரியதற்கு ரூ. 18 லட்சம், அதற்கான வட்டி, செலவுத்தொகை சேர்த்து ரூ.40 லட்சத்து 6 ஆயிரத்தை கும்பகோணம் நகராட்சி ஆணையர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். 3 மாதகால காலமாகியும் பணம் தராததால், நடேசன் தஞ்சை விரைவு நீதிமன்றத்தில் நிறைவேற்றும் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சந்திரன் நடேசனுக்கு பணம் வழங்காத கும்பகோணம் நகராட்சியின் அனைத்து அசையும் சொத்துகளை ஜப்தி செய்து அதனை பொது ஏலத்தில் விற்று அதற்குரிய பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என கடந்த 8ம் தேதி உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று தஞ்சை விரைவு நீதிமன்ற ஊழியர்கள் மதியழகன், ராஜசேகர், ஒப்பந்தகாரர் நடேசன் ஆகியோர் கும்பகோணம் நகராட்சி அலுவலகத்திற்கு ஜப்தி செய்ய வந்தனர். இத்தகவலறிந்ததும் நகராட்சி வளாகத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து வாகனங்களையும் டிரைவர்கள் அவசர அவசரமாக வெளியே எடுத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் ஒப்பந்தகாரர் நடேசனிடம் கும்பகோணம் நகராட்சி ஆணையர் வரதராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆணையர் அளித்த உறுதியின் பேரில் ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

 

நெகமத்துக்கு 15லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும் துணை முதல்வரிடம் பேரூராட்சி தலைவர் கோரிக்கை

Print PDF

தினகரன்                 28.10.2010

நெகமத்துக்கு 15லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும் துணை முதல்வரிடம் பேரூராட்சி தலைவர் கோரிக்கை

கிணத்துக்கடவு,அக்.28:நெகமத்துக்கு தினம் 15 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டுமென துணை முதல்வரிடம் பேரூராட்சி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நெகமம் பேரூராட்சி தலைவர் சபரி கார்த்திகேயன் சென்னையில் துணை முதல்வர் ஸ்டாலினிடம் ஒரு மனு கொடுத்துள்ளார், அதில் அவர் கூறி இருப்பதாவது

கோவை மாவட்டம் பெரிய நெகமம் பேரூராட்சியில் 1989ல் தி.மு..அரசின் போது வடிவமைக்கப் பட்டு 1996ல் செயல்படுத்திய சூளேஸ்வரன்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தற்போது குடிநீர் கிடைத்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. பேரூராட்சி பகுதியில் சுழற்சி முறையில் இத்தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஒரு சுழற்சி முடிய 20 நாட்கள் ஆகிறது. இதனால் இப்பகுதியில் கடும் குடிநீர்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, அதை போக்க ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் தரப்படுகிறது. தற்போது பருவமழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. அதனால் குறைந்த அளவே தண்ணீர் கிடைக்கிறது.

மாவட்ட கலெக்டர் சிறப்பு நிதியின் மூலம் போடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் வறண்டு விட்டன.சூளேஸ்வரன் பட்டி குடிநீர் திட்டத்தில் இருந்து மிக்தடை, குடிநீர் குழாய் உடைப்பு போன்ற காரணங்களால் ஏற்கனவே 2லட்சத்து 60ஆயிரம் லிட்டர் குடிநீர்தான் கிடைக்கிறது.

இதனால் பொதுமக்களுக்கு தேவையான குடிநீரை தர முடிவதில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் கட்டணத்தை செலுத்துவதில் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

சூளேஸ்வரன்பட்டிக்கு இத்திட்டத்தின் மூலம் தினம் 15 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கிறது. அந்த பேரூராட்சிக்கு தற்போது புதிய குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. அத்திட்டம் முடிந்த பிறகு ஏற்கனவே பெற்று வரும் 15 லட்சம் லிட்டர் குடிநீரை பெரிய நெகமம் பேரூராட்சியில் நிலவும் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் அவர் கூறி இருக்கிறார்.

 


Page 340 of 841