Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

துப்புரவுப் பணியாளர் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை அளிப்பு

Print PDF

தினமணி 21.10.2010

துப்புரவுப் பணியாளர் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை அளிப்பு

பட்டுக்கோட்டை, அக். 20: பட்டுக்கோட்டையில் துப்புரவுப் பணியாளர் குடும்பத்துக்கு ரூ. 1.5 லட்சம் காப்பீட்டுத் தொகை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

பட்டுக்கோட்டை நகராட்சி துப்புரவுப் பணியாளர் செ. சின்னப்பொன்னு பணி காலத்தில் இறந்தார். இதையொட்டி, அவருடைய மகன் செ. சுப்பிரமணியனிடம் குழுக் காப்பீட்டுத் திட்டத்தில் அளிக்கப்பட்ட ரூ. 1.5 லட்சத்துக்கான காசோலையை நகராட்சி ஆணையர் கு.வெ. பாலகிருஷ்ணன் வழங்கினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற முன்னாள் தலைவர் சீனி. இளங்கோ, உறுப்பினர் எஸ். ஸ்ரீதர், முன்னாள் உறுப்பினர் டி. கோவிந்தராஜ், அலுவலக மேலாளர் என். ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் என். ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

பெங்களூர் மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர் 29ம் தேதி நியமனம்

Print PDF

தினகரன் 21.10.2010

பெங்களூர் மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர் 29ம் தேதி நியமனம்

பெங்களூர், அக். 21: பெருநகர் பெங்களூர் மாநகராட்சியில் நியமனம் செய்யாமல் உள்ள 11 நிலைகுழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை வரும் 29ம் தேதி நியமிக்க மேயர் எஸ்.கே.நடராஜ் முடிவு செய்துள்ளார்.

பெங்களூர் பெருநகர் மாநகராட்சிக்கு 41 மாதங்கள் கழித்து கடந்த மார்ச் 28ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் உள்ள 198 வார்டுகளில் 111 வார்டுகளில் பாஜ வெற்றி பெற்று பெருபான்மை பலத்துடன் நிர்வாகத்தை கைபற்றியது. பாஜ நிர்வாகத்தில் முதல் மேயராக எஸ்.கே.நடராஜ் மற்றும் துணை மேயராக என்.தயானந்த் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேயர், துணைமேயர் தேர்வு முடிந்த பின் மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள் நியமனம் செய்யும் முயற்சியை மேயர் மேற்கொண்டார். நிலைக்குழு தலைவர் பதவிக்கு பாஜவில் பலர் முயற்சி செய்ததால், நியமனம் தாமதமாகியது.

இடையில் மாநகராட்சியில் 100 வார்டுகள் இருந்தபோது 8 நிலைக்குழுக்கள் இருந்தது. தற்போது மாநகராட்சி வார்டு எண்ணிக்கை 198 ஆக உயர்ந்துள்ளதால், நிலைக்குழு எண்ணிக்கையை 8ல் இருந்து 12 ஆக உயர்த்துவதுடன், உறுப்பினர் எண்ணிக்கையை 8ல் இருந்த 12 வரை உயர்த்த முடிவு செய்து மாநில அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. மாநகராட்சி கோரிக்கையை பரிசீலனை செய்த அரசு நிலைக்குழுவை 12ஆக உயர்த்தி கொள்ள அனுமதிக்க முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நிலைக்குழு எண்ணிக்கை உயர்த்தி அரசு எடுத்துள்ள முடிவுக்கு ஒப்புதல் கேட்டு ஆளுநருக்கு கோப்பு அனுப்பபட்டது. இதை பரிசீலனை செய்த ஆளுநர் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி ஒப்புதல் வழங்கினார்.

இதை தொடர்ந்து நிலைக்குழு அமைக்கும் முயற்சியை மேயர் மேற்கொண்டார். 29ம் தேதி பாக்கியுள்ள பொது சுகாதாரம், நகர திட்டம் மற்றும் வளர்ச்சி, பெரிய வளர்ச்சி திட்டம், வார்டு அளவில் பொது வளர்ச்சி திட்டம், தணிக்கை, கல்வி, சமூகநீதி, மேல்முறையீடு, தோட்டக்கலை, மார்கெட், நிர்வாக சீர்த்திருத்தம் ஆகிய நிலை குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்ய முடிவு செய்துள்ளார்.

இதில் ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டுள்ள நிதி மற்றும் வரி நிலைக்குழுவுடன் சேர்த்து மொத்தம் 12 நிலைக்குழு தலைவர்கள் மற்றும் 132 உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். இதில் நிலைக்குழு தலைவர் பதவியுடன் 84 பாஜ கவுன்சிலர்களுக்கு உறுப்பினராகும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் 48 எதிர்க்கட்சி கவுன்சிலர்களுக்கு உறுப்பினராகும் வாய்ப்பு கிடைக்கும். தற்போது நியமனம் செய்யப்படும் நிலைக்குழுவின் பதவி காலம் ஓராண்டு மட்டுமே. இதில் ஏற்கனவே 5 மாதம் கடந்துள்ளதால் இன்னும் 7 மாதங்கள் மட்டுமே தலைவர் மற்றும் உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என்பது குறிப்பிடதக்கது.

 

சிவகாசி நகராட்சியில் ரூ.44 லட்சம் மதிப்பில் எரிவாயு தகன மேடை

Print PDF

தினகரன் 21.10.2010

சிவகாசி நகராட்சியில் ரூ.44 லட்சம் மதிப்பில் எரிவாயு தகன மேடை

சிவகாசி, அக். 21: சிவகாசி நகராட்சியில் பயோ காஸ் மூலம் எரியூட்ட வசதியாக எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.

சிவகாசி நகராட்சிக்கு சொந்தமான மயானத்தின் அருகே எரிவாயு தகன மேடை ரூ.44லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. கிரானைட் கற்களால் ஆன தரைதளத்தில் நவீன கருவிகளும், அதிக நீளம் கொண்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்ட புகைபோக்கியுடன் இந்த எரிவாயு மயானம் அமைக்கப்படுகிறது.

400 டிகிரி வெப்பநிலையை உருவாக்கி உடலினை எரியூட்டும் வகையில் இந்த தகனமேடை அமைக்கப்பட்டுள்ளது. தினசரி காலை 7மணி முதல் மாலை 6மணி வரை செயல்பட உள்ள இந்த மயானத்தில் ஒருவரது உடலை சுமார் 45நிமிடத்தில் எரியூட்ட முடியும். இதிலிருந்து வெளியேறும் புகை இங்குள்ள புகை போக்கி மூலம் 100அடி உயரத்தில் வானில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தியான மேடை, பார்க்கிங் வசதி, போகஸ் விளக்கு, புல்வெளி உள்ளிட்ட வசதிகளும் இந்த எரிவாயு தகன மயானத்தில் அமைக்கபட்டு வருகின்றன. பணிகள் முடிந்த உடன் விரைவில் நகராட்சி நவீன எரிவாயு தகன மேடை திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 348 of 841