Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

தாம்பரம் கடப்பேரி மயானத்தில் எரிவாயு தகன மேடை அமைவது எப்போது?

Print PDF

தினகரன் 19.10.2010

தாம்பரம் கடப்பேரி மயானத்தில் எரிவாயு தகன மேடை அமைவது எப்போது?

தாம்பரம், அக். 19: தாம்பரத்தில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணி, ஆண்டுகள் பலவாகியும் முடிக்கப்படாமல் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. தாம்பரம் நகராட்சி மயானத்தில் இறந்தவர்களை புதைத்தும், எரித்தும் வருகின்றனர். நகராட்சி பகுதியில் இறந்தவர்களின் உடல்களை மயானத்தில் திறந்தவெளியில் எரிப்பதால் பொதுமக்களுக்கு சுகாதார கேடு ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், தாம்பரம் நகராட்சியில் பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டும் மயானப்பகுதிலேயே நவீன எரிவாயு தகன மேடை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

நகராட்சியில் கடப்பேரி, சேலையூர், கிழக்கு தாம்பரம், மௌனநகர், கன்னடர்பாளையம், திருநீர்மலை ரோடு போன்ற இடங்களில் மயானங்கள் உள்ளன. அனைத்தும் நகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடப்பேரி மயானத்தில் அதிகளவில் சடலங்கள் எரிக்கப்படுவதால் இங்கு எரிவாயு தகனமேடை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ரூ50 லட்சத்தில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதில் அரசு மானியமாக ரூ20லட்சம் வழங்கியது. மீதி ரூ30 லட்சம் நகராட்சி பொது நிதியில் இருந்து செலவிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தகனமேடைக்கான டெண்டர் விடப்பட்டது. மதுரையை சேர்ந்த ஜூவாலா எக்யூப்மென்ட் அண்டு கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்கு பணி வழங்கப்பட்டது.

பலமுறை கவுன்சில் கூட்டங்களில் வலியுறுத்தியும், பணியை செய்யாத அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படவில்லை. தற்போது கட்டிட வேலைகள் முடியும் நிலையில் இருந்தாலும், தகன மேடை இயந்திரங்கள் நிறுவப்படவில்லை. தினமும் ஆறு, ஏழு சடலங்கள் இங்கு வருகின்றன. கட்டிடம் கட்டப்படுவதால் இடவசதியின்றியும், தண்ணீர் வசதி இல்லாமலும் சடலங்களை தகனம் செய்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. பணியை விரைந்து முடிக்க நகராட்சி நிர்வாகம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதில் உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

தொடர்ந்து ஏழாவது தடவையாக கல்யாண் மாநகராட்சி தேர்தலை 3 கிராம மக்கள் புறக்கணிப்பு

Print PDF

தினகரன் 15.10.2010

தொடர்ந்து ஏழாவது தடவையாக கல்யாண் மாநகராட்சி தேர்தலை 3 கிராம மக்கள் புறக்கணிப்பு

மும்பை, அக்.15: கல்யாண்&டோம்பிவலி மாநகராட்சிக்கு வரும் 31ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த மாநகராட்சிக்கு உட்பட்ட 3 கிராமங்கள் ஏழாவது தடவையாக தேர்தல் புறக்கணிப்பு செய்கின்றன.

ஆதிவாசி மக்கள் வசிக்கும் ஆம்பிவலி, மொஹிலி, பல்யாணி ஆகிய இந்த மூன்று கிராமங்களிலும் சுமார் 3,000 வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமங்கள் கடந்த 28 ஆண்டுகளாக இந்த மாநகராட்சியின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. ஆனால் இவற்றின் வளர்ச்சிக்காக மாநகராட்சி எதுவுமே செய்யவில்லை என்று கிராம மக்கள் கடந்த பத்து ஆண்டு காலமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அத்துடன் தொடர்ந்து ஏழாவது முறையாக தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளனர். எந்த அரசியல் கட்சிக்கும் ஓட்டு போட வேண்டாம் என்று இந்த கிராம மக்கள் சார்பில் தொடங்கப்பட்டுள்ள சர்வபக்ஷியா கிராம்விகாஸ் சங்கர்ஷ் சமிதிஎன்ற அமைப்பு பிரசாரம் செய்து வருகிறது. கல்யாண்&டோம்பிவலி மாநகராட்சியில் இருந்து இந்த கிராமங்கள் நீக்கப்பட்டு மூன்று தனித்தனி கிராம பஞ்சாயத்துக்கள் உருவாக்கப்பட வேண்டும் என இந்த சமிதி கோரி வருகிறது.

சமிதியின் தலைவர் கணேஷ் மாத்ரே இப்பிரச்னை பற்றி கூறுகையில், "நாங்கள் மாவோயிஸ்டுகள் இல்லை. பொதுமக்களை துப்பாக்கி முனையில் மிரட்டி தேர்தலை புறக்கணிக்கும்படி கூறவும் இல்லை. ஜனநாயக முறையில் பொதுக்கூட்டங்கள் மூலமாகவும் பேரணிகள் மூலமாகவும் எங்கள் கருத்துக்களை மக்களிடம் எடுத்துக் கூறுகிறோம். பத்து ஆண்டுகளாக தேர்தல் புறக்கணிப்பு செய்தும்கூட எங்கள் குறைகளை கேட்க அதிகாரிகள் யாரும் இங்கு வரவில்லை.

கிராம நிலம் அனைத்தும் மாநகராட்சிக்கு சொந்தமானதாக இருக்கிறது. இவற்றை கட்டிடங்கள் கட்ட பயன்படுத்த முடியும் என்பதால் பில்டர்களும் அரசியல்வாதிகளும்தான் பயன் அடைவார்கள். இந்த நிலங்கள் மீது எந்தவொரு முடிவையும் எடுக்கும் முன்பு கிராம மக்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டும். கடந்த 28 ஆண்டுகளில் இந்த கிராமங்களின் வளர்ச்சிக்காக மாநகராட்சி வெறும் ரூ33.47 லட்சம் மட்டுமே செலவிட்டு இருப்பது மாநகராட்சி ஆவணங்களில் இருந்து தெரிய வந்துள்ளது. மாநகராட்சி எங்களை கவனிக்காத போது நாங்கள் ஏன் அதனுடன் சேர்ந்து இருக்க வேண்டும்? பல முறை தேர்தலை புறக்கணித்தும்கூட எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எனவே இப்பிரச்னை தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுக இப்போது முடிவு செய்துள்ளோம்Ó என்றார்.

இதற்கிடையே, கிராம மக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஒரு அரசியல் கட்சியின் வலையில் விழுந்துள்ள பல்யாணி கிராம மக்களின் ஒரு பிரிவினர் இந்த தடவை தேர்தலில் ஓட்டுபோட முடிவு செய்துள்ளனர்.

கல்யாண்&டோம்பிவலி மாநகராட்சி ஏற்கனவே இதுபோன்ற ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. மாநகராட்சியில் இருந்து பிரிந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என 27 கிராமங்கள் கோரிக்கை விடுத்தன. இதை வலியுறுத்தி இந்த கிராமங்கள் கடந்த 1995ம் ஆண்டில் இருந்து 2002ம் ஆண்டு வரையில் தேர்தல்களை புறக்கணித்தும் வந்தன. இதனை தொடர்ந்து அந்த கிராமங்களின் கோரிக்கையை அரசு ஏற்றது.

 

அக். 18-26 வரை பத்மநாபபுரம் நகராட்சியில் மக்கள் குறைதீர் நாள்

Print PDF

தினமணி 14.10.2010

அக். 18-26 வரை பத்மநாபபுரம் நகராட்சியில் மக்கள் குறைதீர் நாள்

தக்கலை, அக். 13: பத்மநாபபுரம் நகராட்சியில் மக்கள் குறைதீர் நாள் அக். 18-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து, நகர்மன்றத் தலைவர் அ. ரேவன்கில் வெளியிட்டுள்ள அறிக்கை:

பொதுமக்கள் குறைதீர் நாளில் அரசு சார்பில் கிடைக்க வேண்டிய ஊனமுற்றோர், முதியோர் ஆகியோர் உதவித்தொகை பெறவும், முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்வது உள்ளிட்ட எல்லா அரசுத் துறை சார்ந்த உதவிகள் பெறவும், குறைகள் நீக்கவும் மனு செய்யலாம்.

அம்மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பி வைக்கப்படும். எனவே, கீழ்கண்ட தேதிகளில் காலை 10.30 மணிக்கு அந்தந்த வார்டு பகுதிக்குள்பட்ட பகுதிகளில் முகாம்கள் நடைபெறுகின்றன. வார்டு 1, 8-வது வார்டுக்கு 18.10.2010 அன்று சாரோடு சி.எஸ்.. சமுதாய நலக்கூட வளாகத்திலும், 2, 3, 4, 5 ஆகிய வார்டுகளுக்கு 19-ம் தேதி பத்மநாபபுரத்திலுள்ள கல்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 6, 7, 12 வார்டுகளுக்கு 20-ம் தேதி மேட்டுக்டை அரசு முஸ்லீம் தொடக்கப் பள்ளியிலும், 9, 10, 11 வார்டுகளுக்கு 21-ம் தேதி தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 13, 14 வார்டுகளுக்கு பழைய நகராட்சி அலுவலக வளாக நகர்மன்றக் கூடத்திலும், 15, 16, 17, வார்டுகளுக்கு 23-ம் தேதி தற்போது செயல்பட்டு வரும் நகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள நூலகத்திலும், 18, 19 வார்டுகளுக்கு 25-ம் தேதி புலியூர்குறிச்சி பயணிகள் விடுதியிலும், 20, 21 வார்டுகளுக்கு 26-ம் தேதி பயணிகள் விடுதியிலும் மக்கள் குறைதீர் நிகழ்ச்சி நடைபெறும்.

 


Page 351 of 841