Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ரூ2.6 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வருமா? எஸ்.வெங்கடாசலம்

Print PDF

தினமணி    14.10.2010

ரூ2.6 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வருமா? எஸ்.வெங்கடாசலம்

போடி, அக். 13:÷போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிப் பகுதியில் ரூ 2.6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நவீன பெண்கள் கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வராமல் வீணாகக்கிடக்கிறது.

÷போடி அருகே உள்ள மேலச்சொக்கநாதபுரம் கிராமத்தில் சுகாதார வசதியோ, கழிப்பிட வசதியோ இல்லை. குப்பைகள் தேங்கி நோய் பரவும் நிலை உள்ளது. நவீன கழிப்பிட வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளை திறந்தவெளிக் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.

÷பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து இக்கிராமத்தில் உள்ள 6-வது வார்டில் தர்மத்துப்பட்டி ஓடை பகுதியில் 2001-2002-ம் ஆண்டு பெண்களுக்கான நவீன கழிப்பிடம் கட்டப்பட்டது. ரூ 2.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இக்கழிப்பிடத்துக்கு மின்சார வசதி, தண்ணீர் வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

÷ஆனால் கழிப்பிடத்துக்குச் செல்வதற்கு முறையான பாதை வசதி செய்து தரப்படவில்லை. கழிப்பிடத்துக்குச் செல்லும் வழியில் உள்ள நத்தம் புறம்போக்கு பகுதியைச் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஓடையில் நடந்து சென்று கழிப்பிடத்தை பயன்படுத்தி வந்தனர்.

÷இந்நிலையில் மழைக் காலங்களில் ஓடையில் தண்ணீர் வரத்து இருப்பதாலும், முள் செடிகள் வளர்ந்து புதர் போல் காணப்படுவதாலும் பெண்கள் செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

÷கழிப்பிடத்துக்கு பாதை வசதி செய்து தரக் கோரி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த 8 ஆண்டுகளாக இக்கழிப்பிடம் பயன்படுத்தப்படாமல் பூட்டிய நிலையில் உள்ளது.

÷பல ஆண்டுகளாக கழிப்பிடம் பயன்படுத்தப்படாமலும், பராமரிப்பின்றியும் இருப்பதால் அக்கட்டடம் சிதிலமடையும் நிலையில் உள்ளது. இது குறித்து மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் தொடர்பு கொள்ளச் சென்றபோது, நிர்வாக அலுவலர் வெளியில் சென்றுவிட்டதாகவும், அவர்தான் விபரம் கூற வேண்டும் எனவும் தொடர்ந்து கூறப்பட்டது.

பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இக்கழிப்பிடத்துக்கு பாதை வசதி ஏற்படுத்தவும், முறையாகப் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

கோவை நகரில் நெரிசலுக்கு யார் பொறுப்பு? விதிமீறலால் மக்கள் பாதிப்பு

Print PDF

தினமலர் 14.10.2010

கோவை நகரில் நெரிசலுக்கு யார் பொறுப்பு? விதிமீறலால் மக்கள் பாதிப்பு

கோவை : கட்டட விதிமுறையை பின்பற்றி, வணிக கட்டடங்கள் வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்காததால், நகரில் உள்ள வீதிகளில் நெரிசல் ஏற்படுகிறது. விழாக் காலங்களில் கூட்டம் அதிகரித்திருப்பதால், வாகனம் நிறுத்த பொதுமக்கள் சிரமத் துக்குள்ளாகி வருகின்றனர்.

கோவையில், தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. கோவையிலுள்ள கடை வீதிகளில் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஒப்பணக்கார வீதி, ராஜவீதி, கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் உள்ள ஜவுளிக்கடைகளிலும், நகைக்கடைகளிலும் கூட்டம் அலை மோதுகிறது. அதேபோல, டிபார்ட்மென்டல் ஸ்டோர்களிலும் கூட்டத்துக்குக் குறைவே இல்லை.ஆனால், இந்த வணிக நிறுவனங்களில் பெரும்பாலானவை கட்டடங்களில் முறையான வாகனம் நிறுத்த வசதி, தீத்தடுப்பு வசதிகளை அளிக்கவில்லை. வணிக நிறுவனங்களின் கட்டடத்துக்கான அனுமதியை ஆய்வு செய்தால், ஒவ்வொரு கட்டடத்திலும் "பார்க்கிங்' இடம் ஒதுக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும். இந்த இடம் எதுவுமே இப்போது வாகனங்கள் நிறுத்துமிடமாக இல்லை; எல்லாமே வியாபாரப் பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன் கட்டடப்பட்ட கட்டடங்களிலிருந்து, மிகச் சமீபமாக திறக்கப்பட்டுள்ள வணிக நிறுவனங்கள் வரையிலும் அத்துமீறல்கள் நடந்துள்ளது. ஒரு சில நிறுவனங்கள், கட்டடத்துக்கு சம்மந்தமில்லாத இடத்தை "பார்க்கிங்' இடமாக வைத்துள்ளன. அவற்றில், கார் நிறுத்த மட்டுமே அனுமதிக்கின்றனர்.

புரூக்பாண்ட் ரோட்டில் உருவாகியுள்ள வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது; அங்கு நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கிராஸ்கட் ரோட்டிலுள்ள ஜவுளிக்கடை ஒன்றில், கார்களை நிறுத்த "டிபாசிட்' வாங்கப்பட்டாலும் "பில்' காண்பித்தால் மட்டுமே தொகையை திருப்பித்தருகின்றனர்.

வணிக நிறுவனங்கள் அனைத்துமே, கார்களில் வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இடம் ஒதுக்குகின்றன. டூ வீலர் வைத்திருப்போருக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. கடைகளின் முன் அவற்றை நிறுத்தவும் தடை விதிக்கின்றனர். எனவே, "நோ பார்க்கிங்' இடத்தில் டூ வீலர்களை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் மக்கள் உள் ளனர்.

கட்டட விதிமீறல்கள், "பார்க்கிங்' பிரச்னை பற்றி, யாரும் கண்டுகொள்ளாததால் பொதுமக்களும், போலீ சும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். பொது இடங்களில் வாகனம் நிறுத்த, மாநகராட்சி பொது நிதியில் "மல்டி லெவல் பார்க்கிங்' அமைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். கட்டட அனுமதி பெற வணிக நிறுவனங்கள் வரைபடத்தில் குறிப்பிட்ட "பார்க்கிங்' பகுதிகளை ஆய்வு செய்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். விதிமீறல்கள்,அத்துமீறல்களால் பாதிக்கப்படுவது பொதுமக்களே. மக்களுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அனைத்து அரசுத்துறைகளும், வியாபார நிறுவனங் களுக்கு ஆதரவாகச் செயல் படுவதால், எதிர்காலத்தில் பல விபரீதங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகரித்துள்ளது. வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்காததைப் போல, இந்த கட்டடங்கள் பலவற்றில் தீத்தடுப்பு வசதிகளும் இல்லை. தீபாவளி நாட்களில் மக்கள் கூட்டம் இருக்கும்போது,சிறு அசம் பாவிதம் நிகழ்ந்தாலும் பெரிய அளவில் சேதம் ஏற்படும். சட்டத்தை அமல் படுத்த அரசுத்துறை அதிகாரிகள் களமிறங்க வேண்டும். இல்லாவிட்டால், எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

நடவடிக்கை எடுக்காதது ஏன்? : "பார்க்கிங்' ஒதுக்காத பெரிய வணிக நிறுவனங்களின் மீது, அரசுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருக்க மாமூல், அன்பளிப்பு, லஞ்சம், அச்சம், எதிர்பார்ப்பு என பல காரணங்கள் இருக்கின்றன. "இந்த நிறுவனங்களின் மீது எந்த அரசுத்துறையும் நடவடிக்கை எடுக்கும்' என, பொது மக்கள் எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே தரும். இத்தகைய நிறுவனங்களை பொதுமக்களே புறக்கணிப்பதுதான் சரியான தீர்வு.

 

நீதிபதி முன்னிலையில் வணிக வளாக கடைகள் குலுக்கல் நடத்தி ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 14.10.2010

நீதிபதி முன்னிலையில் வணிக வளாக கடைகள் குலுக்கல் நடத்தி ஒதுக்கீடு

சென்னை, அக். 14: பாண்டி பஜார் வணிக வளாகத்தில், நடைபாதை வியாபாரிகளுக்கு நீதிபதி முன்னிலையில் விரைவில் குலுக்கல் நடத்தி, கடைகள் ஒதுக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுகுறித்து மேயர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

எழும்பூர் ரயில் நிலையம் எதிரிலும், சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரிலும், பூங்கா ரயில் நிலையம் அருகிலும் மற்றும் விக்டோரியா பப்ளிக் ஹாலை சுற்றியிருந்த ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் நடைபாதை கடைகள் அகற்றப்பட்டு, அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக அல்லிக்குளம் வளாகத்தில் கடைகள் ஒதுக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக தியாகராயநகரில் உள்ள தியாகராய சாலை, உஸ்மான் சாலை, சிவப்பிரகாசம் சாலை ஆகிய சாலைகளில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு பாண்டிபஜாரிலும், அயனாவரம் பாலவாயல் மார்க்கெட் சுற்றியுள்ளவர்களுக்கு அதன் அருகாமையிலும், ராயபுரம் மணியக்கார சத்திரத்தெருவில் நடைபாதை வியாபாரிகளுக்கு அந்தப் பகுதியிலும் ஹாக்கின்ஸ் கமிட்டி தலைவர் நீதிபதி ராமமூர்த்தியின் ஆணைப்படி வணிக வளாகங்கள் கட்டப்பட்டது.

இந்த வணிக வளாகங்களை துணை முதல்வர் மு..ஸ்டாலின் கடந்த மாதம் 13ம் தேதி தி.நகரில் நடந்த நிகழ்ச்சியில் திறந்து வைத்தார்.

ராயபுரம் மணியக்கார சத்திரத்தெருவில் 117 பேர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் சில புகார்கள் வந்ததன. அதன் அடிப்படையில், மாநகராட்சி விழிப்புப்பணி அதிகாரி மூலம் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது. அதில் 101 பேர் மட்டுமே உண்மையான பயனாளிகள் என தெரியந்தது. அதில் 16 பேர் கடைகளே இல்லாதவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

அதே போன்று, பாண்டிபஜாரில் உள்ள மாநகராட்சி வணிக வளாகம் மற்றும் அயனாவரம் பாலவாயல் சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகங்களின் உண்மையான பயனாளிகள் விழிப்புப்பணி அதிகாரி மூலம் அந்தந்த பகுதி வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் ஆய்வு செய்து, பட்டியல் தேர்வு செய்து, ஹாக்கின்ஸ் கமிட்டி நீதிபதி ராமமூர்த்தியிடம் சமர்ப்பிக்கப்படும். அவர் முன்னிலையிலேயே பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள கடைகள் நீதிபதி அனுமதி பெற்று, திறந்தவெளி ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

மாநகராட்சி கட்டியுள்ள வணிக வளாகங்களில் உண்மையான பயனாளிகளுக்கு கடைகள் கிடைக்க உறுதி செய்யப்படும். இதன் மூலம் அந்தப்பகுதிகளில் உள்ள சாலைகளில் பொதுமக்கள் எந்தவித சிரமுமின்றி செல்வதற்கு மாநகராட்சி வழிவகுக்கும். இவ்வாறு அறிக்கையில் மேயர் கூறியுள்ளார்.

 


Page 352 of 841