Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

Print PDF

தினத்தந்தி           27.01.2014 

ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

கோபிசெட்டிபாளையம்

குடியரசு தினவிழா கோபிசெட்டிபாளையத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோபி உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் சந்திரசேகரசாகமுரி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி பேசினார்.

கோபி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் துரை தேசிய கொடியை ஏற்றினார். கோபி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் ரேவதிதேவி தேசிய கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதேபோல் கோபியில் உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

இதேபோல் வெங்கடேஸ்வரா ஹை-டெக் என்ஜினீயரிங் கல்லூரியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு முதல்வர் தங்கவேல் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் துணை முதல்வர் பிரகாஷ், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கனகரத்தினம் உள்பட ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

வெங்கடேஸ்வரா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், நிறுவன தாளாளர் கெட்டிமுத்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் இயக்குனர்கள் முருகசாமி, செங்கோட்டையன் மற்றும் பள்ளிக்கூட முதல்வர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஒத்தக்குதிரையில் உள்ள வெங்கடேஸ்வரா இன்டர்நேசனல் பள்ளியில் இயக்குனர் ஜோதிலிங்கம் தேசிய கொடியேற்றி வைத்தார். இதில் முதல்வர் ஹரிகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கவுந்தப்பாடியில் உள்ள வெங்கடேஸ்வரா நர்சரி மற்றும் பிரைமரி, வெள்ளாங்கோவில் வீனாவித்யாலயா ஆகிய பள்ளிக்கூடங்களில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் இயக்குனர் திக்விஜயன் கலந்துகொண்டு, தேசிய கொடியேற்றி வைத்தார்.

கோபி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஐ.டி.ஐ.யில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் தலைவர் சிராஜூதின் தலைமை தாங்கினார். தாளாளர் கார்த்திக்அரசு முன்னிலை வகித்தார். முதல்வர் சுரேஷ்குமார் தேசிய கொடி ஏற்றிவைத்து பேசினார். இதில் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தன.

விழாவில், துணைமுதல்வர் கோவிந்தராஜன், அனைத்து துறை தலைவர்கள், ஐ.டி.ஐ. முதல்வர் ஏ.பி.ஆனந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரியின் செயலாளர் நடராஜன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் முதல்வர் ஆர்.செல்லப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கோபி பி.கே.ஆர். மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரியின் தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். விழாவில் வக்கீல் பாலசுப்ரமணியன் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றினார். இதில் தாளாளர் பி.என்.வெங்கடாசலம், முதல்வர் ஜெகதாலட்சுமணன், டாக்டர் செந்தில்நாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அம்மாபேட்டை

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாதேவி, சிவபாலன் ஆகியோரின் முன்னிலையில் ஒன்றியக்குழுத்தலைவர் எஸ்.எஸ்.அய்யாசாமி தேசிய கொடியை ஏற்றினார். முன்னதாக அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெரியசாமி நடுநிலைப்பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள், ஒன்றியக்குழு துணைத்தலைவர் எம்.கே.முருகேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் லட்சுமணன், ராஜேந்திரன், ரங்கநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலத்தில் தலைவர் டி.செந்தில்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணைத்தலைவர் யு.எஸ்.சுந்தரராஜன் மற்றம் கவுன்சிலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர். பூதப்பாடியில் உள்ள காந்தி சிலைக்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வி.எஸ்.சரவணபவா, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கே.சிவா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் பேரூராட்சி அலுவலகத்தில், பேரூராட்சி தலைவர் ராஜலட்சுமி சாமிநாதன் தேசிய கொடியை ஏற்றினார். இதில் பேரூராட்சி துணைத்தலைவர் மாணிக்கவாசகம், பேரூராட்சி செயல் அதிகாரி நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சியில் பேரூராட்சி தலைவர் பூர்ணம் கதிரழகன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் அலுவலக பணியாளர்கள், வார்டு கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். வெங்கம்பூர் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் சூர்யாசிவக்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் பேரூராட்சி செயல் அதிகாரி சின்னதுரை மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

கிளாம்பாடி

கிளாம்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் சுப்பிரமணியம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் செயல் அதிகாரி செல்வக்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

பாசூர் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் எஸ்.சுந்தரராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் துணைத்தலைவர் ஆறுமுகம், செயல் அலுவலர் விஜயகுமார், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பெரியசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

கொடுமுடி

கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுத்தலைவர் தமிழ்ச்செல்வி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் ஆணையாளர்கள் பாலகிருஷ்ணன், ராஜூ மற்றும் அலுவலக பணியாளர்கள், பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

கொடுமுடி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் சரவணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் துணைத்தலைவர் மனோகரன் மற்றும் கவுன்சிலர்கள், எஸ்.எஸ்.வி. பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். கொடுமுடி போலீஸ் நிலையம் முன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி மரக்கன்றுகளை நட்டார். கொடுமுடி எஸ்.எஸ்.வி.மேல்நிலைப்பள்ளி, மகளிர் உயர்நிலைப்பள்ளி, சீதாலட்சுமி பள்ளிக்கூடம், சி.எஸ்.ஐ.பள்ளிக்கூடம், கே.பி.கே.பள்ளிக்கூடம், ஸ்ரீ வள்ளி கல்வியியல் கல்லூரி, தாமரை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நகப்பாளையம் பள்ளிக்கூடம் மற்றும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சென்னிமலை

சென்னிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு மாவட்ட பொதுச்செயலாளர் கே.என்.சாமிநாதன் தலைமை தாங்கினார். தியாகி திருப்பூர் குமரன் சிலைக்கு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் விடியல் எஸ்.சேகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னிமலை பஸ்நிலையம் அருகில் நடைபெற்ற விழாவில் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் கொடியேற்றினார். இந்த விழாக்களில் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் வட்டார தலைவர்கள் குருநாதன், கதிரேசன், ரத்தினசாமி, முன்னாள் பொதுச்செயலாளர் மே.தா.கந்தசாமி, செந்தில்வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதன் தலைவர் சுப்புலட்சுமி அய்யாசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மூர்த்தி, சுந்தரம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் முத்துராமலிங்கமும், சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தில் மாவட்ட வன அதிகாரி(சத்தி) கே.ராஜ்குமார், சத்தியமங்கலம் வனத்துறை அலுவலகத்தில் ரேஞ்சர் சண்முகம், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். அரசூர் ஊராட்சியில் அதன் தலைவர் சி.ஆர்.செல்வராஜ், குத்தியாலத்தூர் ஊராட்சியில் தலைவர் பாக்கியமணி தேவராஜ், இண்டியம்பாளையம் ஊராட்சியில் தலைவர் எஸ்.கவிதா, கொமராபாளையம் ஊராட்சியில் தலைவர் எஸ்.ஆர்.நஞ்சப்பன், கோணமூலை ஊராட்சியில் தலைவர் எஸ்.பத்மினிசண்முகம், மாக்கிணாங்கோம்பை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் திலகவதி திருமூர்த்தி, ராஜன்நகர் உராட்சியில் தலைவர் கே.நஞ்சுண்டமூர்த்தி, சதுமுகை ஊராட்சியில் தலைவர் என்.எஸ்.வரதராஜ், செண்பகபுதூர் ஊராட்சியில் தலைவர் வி.என்.சின்னசாமி, உக்கரம் ஊராட்சியில் தலைவர் ராம்கருணாநிதி ஆகியோர் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்கள்.

சிவகிரி

சிவகிரி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் பரமு என்கிற ஆறுமுகம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சிவகிரி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சண்முகம் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரக்கன்றுகளை நட்டார்.

அந்தியூர்


ஒலகடம் காந்தி சிலை அருகே காங்கிரஸ் சார்பில், குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. முன்னாள் மாவட்ட தலைவர் சச்சிதானந்தம் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் வட்டார தலைவர் சந்திரன், நகரத்தலைவர் சண்முகம் உள்பட காங்கிரசார் பலர் கலந்துகொண்டனர்.

பட்லூர் காங்கிரஸ் அலுவலகத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் சேதுவெங்கட்ராமன் தலைமையில் காந்தி உருவபடத்திற்கு மாலை அணி வித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் சச்சிதானந்தம் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். இதில் தொண்டர் அணி பிரகாஷ் உள்பட காங்கிரசார் பலர் கலந்துகொண்டனர்.

புஞ்சைபுளியம்பட்டி

பவானிசாகர் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் வி.ஏ.பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் துணைத்தலைவர் வேலுமணி, ஆணையாளர் பத்மா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Last Updated on Wednesday, 29 January 2014 07:00
 

காங்கிரஸ் அலுவலகம்-மாநகராட்சியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு

Print PDF

தினத்தந்தி           27.01.2014 

காங்கிரஸ் அலுவலகம்-மாநகராட்சியில் குடியரசு தின விழா கொண்டாட்டம் காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு

திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகம், மாநகராட்சி அலுவலகங்களில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

குடியரசு தினவிழா

திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான அருணாசலமன்றத்தில் குடியரசு தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கினார். முன்னதாக காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

விழாவில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.சி பாபு, மாநகர காங்கிரஸ் நிர்வாகிகள் பாரி, முத்துக்குமார், சத்தியநாதன், சந்தான கிருஷ்ணன், தனபால், முன்னாள் தலைவர் ராஜகோபால், சேகர், ஜோசப், ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் வக்கீல் சரவணன் தலைமையில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

மாநகராட்சியில்...

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. மேயர் ஜெயா தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி வைத்தார். விழாவுக்கு ஆணையர் தண்டபாணி, துணைமேயர் மரியம் ஆசிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணி நிறைவுசெய்த 33 நபர்களுக்கும், திருச்சி மாநகராட்சி பசுமைப்பூங்காவில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு சான்றிதழ்களும், மாநகராட்சி பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற 37 மாணவ,மாணவிகளுக்கும், ஸ்ரீரங்கம் மாநகராட்சியில் பள்ளியில் யோகாசனம் நிகழ்ச்சியில் பங்கேற்ற15 மாணவ, மாணவிகளுக்கும், ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா பணிகளை சிறப்பாக செய்த 4 அலுவலர்களுக்கும், பேருந்து விரைவுத்திட்டம் மற்றும் நவீன ஆட்டிறைச்சி கூடம் அமைப்பதற்கு கருத்துரு தயார் செய்யும் பணியினை சிறப்பாக மேற்கொண்டமைக்கு 2 அலுவலர்களுக்கும், பூங்கா பராமரிப்பு பணிகளை சிறப்பாக செய்த ஒரு அலுவலருக்கும், பஞ்சப்பூர் பூங்கா அமைக்கும் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட2 அலுவலர்களுக்கும் மேயர் ஜெயா பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் மேயர் ஜெயா அரசு தலைமை மருத்துவமணை அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள் அஸ்தி மண்டபத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின்னர் போர் வீரர்கள் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். காந்தி சந்தை வளாகத்தில் உள்ள காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருச்சி கோர்ட்டு

திருச்சி கோர்ட்டு வளாகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதி பி. வேல்முருகன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் நீதிபதி ரகுமான், குற்றவியல் தலைமை நீதிபதி பாலச்சந்திரன், வக்கீல் சங்க தலைவர் வீரபாண்டியன், துணை தலைவர் அருள், ஓம்பிரகாஷ் உள்பட மூத்த வழக்கறிஞர்கள், மாவட்ட நீதிபதியின் நேர் முக உதவியாளர் மகேஷ்குமார் மற்றும் அனைத்து மாஜிஸ்திரேட்டுகள் கலந்து கொண்டனர்.

 

453 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்

Print PDF

தினமணி          26.01.2014 

453 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்

திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட இடுவம்பாளையம், வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர், மாணவியர் 453 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகள், 353 பேருக்கு மிதிவண்டிகளை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் சனிக்கிழமை வழங்கினார்.

  இடுவம்பாளையம், வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளின் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் த.பாரிவேல் தலைமை வகித்தார்.

  மேயர் அ.விசாலாட்சி, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. வாரியத் தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணன், பல்லடம் எம்எல்ஏ பரமசிவம், துணை மேயர் சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 இதில், வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், 353 மாணவ, மாணவியருக்கு ரூ. 11.56 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளையும், 453 மாணவ, மாணவியருக்கு ரூ. 72.43 லட்சம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளையும் வழங்கினார்.

 இதில், பல்லடம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ. 8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் பள்ளிக் கட்டடத்தையும் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்.

  மாவட்ட கல்வி அலுவலர் கரோலின், மாவட்ட ஊராட்சித் தலைவர் எம். சண்முகம்,  துணையாட்சியர்(சிறப்புத் திட்டங்கள்) தர்மராஜ், மண்டலத் தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், கூட்டுறவு சங்கத் தலைவர் வி.எம்.கோகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Page 38 of 841