ஏ.பி.எஸ்.அகடமி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா கவிஞர் வைரமுத்து பங்கேற்பு
Saturday, 25 January 2014 09:46
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ரம் மற்றும் மாந௧ரம்
தினகரன் 25.01.2014 ஏ.பி.எஸ்.அகடமி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா கவிஞர் வைரமுத்து பங்கேற்பு
அனுப்பர்பாளையம்,; திருப்பூர் மாநகராட்சி பூலுவபட்டி ஏ.பி.எஸ்.அகடமி மெட்ரிக் பள்ளியின் 5-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு மகாத்மா காந்தியின் முதன்மை செயலாளர் (1944-1948) சுதந்திரபோராட்ட தியாகி வி.கல்யாணம் தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகராட்சி கல்விக்குழுத்தலைவர் மற்றும் ஏ.பி.எஸ்.அகடமி கல்வி நிறுவனங்களின் தலைவர் பட்டுலிங்கம், ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் பள்ளி தாளாளர் கார்த்திகேயன், கேம்பிரிட்ஜ் மெட்ரிக் பள்ளி தாளாளர் துரைசாமி, விகாஸ் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் சேர்மன் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கவிஞர் வைரமுத்து பரிசுகளை வழங்கி பேசினார்.
புதுச்சேரி அஸிஸ்ட் வேல்டு ரெக்கார்டு நிறுவனர் ராஜேந்திரன், க்யூ-எல்யோ-மல்டிவெர்சல் யோகா நிறுவனர் ஸ்டோயன் யங், திருப்பூர் ஜினாஸ்டிக் அசோசியேஷன் தலைவர் மற்றும் ஏபிஎஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சரவணக்குமார், ஏபிஎஸ் கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை பொருளாளர் அம்பிகாவதி, அறக்கட்டளை உறுப்பினர் நந்தினி, யோகாசக்ரவர்த்தி ஞானாம் பாள்(93வயது), திருப்பூர் மாவட்ட யோகா அசோசியேஷன் நிர்வாகி எள்ளுசாமி, ரெக்கார்டு ரெசர்ஸ் தாளா ளர் அருண், தமிழ்நாடு யோகா விளையாட்டு மேம்பாட்டுக்கழக செயலாளர் மாரியப்பன், இந்தியன் யோகா பெட்ரேசன் செயலாளர் மஜும்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளிக்குழந்தைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமையாசிரியை மரகதம் நன்றி கூறினார்.
|
பழைய 36 முதல் 45வது வார்டு வரை ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்க அழைப்பு
Saturday, 25 January 2014 09:44
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ரம் மற்றும் மாந௧ரம்
தினகரன் 25.01.2014 பழைய 36 முதல் 45வது வார்டு வரை ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்க அழைப்பு
ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி பழைய வார்டு 36 முதல் 45 வரை உள்ள பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணிகள் 25ம்தேதி (இன்று) முதல் 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. புகைப்படம் எடுக்காமல் விடுபட்டவர்கள் மற்றும் கடந்த முகாமில் புதியதாக பெயர் சேர்க்கப்பட்டவர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
36வது வார்டு ஜீவானந்தம் ரோடு, பெரும்பள்ளம் ஓடை குடிசைகள், ஜீவானந்தம் குடிசைமாற்று வாரிய பகுதியைச் சேர்ந்தவர்கள் ஈரோடு காந்திஜிரோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 37வது வார்டுக்குட்பட்ட ஈவிஎன் ரோடு, கருப்பண்ணன் வீதி, பெரியார் நகர் பகுதிகள், பெரியார் நகர் குடிசை மாற்றுவாரியம், ராஜாக்காடு மற்றும் ராஜாக்காடு சந்து ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள் சி.எஸ்.ஐ.பள்ளியிலும் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். 38வது வார்டு அண்ணாநகர் மெயின் வீதி, அண்ணா நகர் குடிசை பகுதி, அசோகபுரி, பெரியார்நகர், ஸ்டோனிபிரிட்ஜ் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஈரோடு பெரியண்ண வீதியில் உள்ள கலைமகள் கல்வி நிலைய தொடக்கப்பள்ளியிலும், 39வது வார்டுக்குட்பட்ட தனக்கொடி லேஅவுட், கருப்பண்ணசாமி கோவில் வீதி, மாரப்பன் வீதி, ராஜரத்தினம் வீதி, எஸ்.கே.சி.ரோடு ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள் சூரம்பட்டி இந்து கல்வி நிலையத்திலும் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
40வது வார்டு அவ்வையார் வீதி, கிராமடை, தேவா வீதி, லட்சுமணண் வீதி, சாந்தான் கருக்கு, வேலா வீதி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும், 41வது வார்டு ஈஎம்எம் வீதி, பெருமாள்காடு ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்களும், 42வது வார்டு ஈஸ்வரன் வீதி, ஈவிஎன் ரோடு, காந்திஜிரோடு, கள்ளியங்காடு குடிசை பகுதி, பொய்யேரிக்கரை, பொய்யேரிக்கரை குடிசை பகுதி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஸ்டோனி பிரிட்ஜில் உள்ள மாணவர் விடுதியில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
43வது வார்டுக்குட்பட்ட பாலசுப்பராயலு வீதி, கிழக்கு பட்டக்கார வீதி, ஜீவானந்தம் ரோடு, காதர்மொய்தீன் வீதி, பழைய ரயில்வே ஸ்டேசன் ரோடு, பட்டக்காரர் வீதி, ஷேக்தாவூத் வீதி, தங்க பெருமாள் வீதி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ரயில்வே காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். 44வது வார்டுக்குட்பட்ட எல்.ஜி.ஜி.எஸ். காலனி ரயில்வே காலனி ரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும், 45வது வார்டுக்குட்பட்ட ஈஎம்எம் மெயின் வீதி, ஈஎம்எம் வீதி, குட்ஷெட்ஸ் எதிர்புறமுள்ள குடிசை பகுதிகள், மணல்மேடு வீதி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொல்லம்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாநகராட்சியில் 5,675 குடும்பத்தினருக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார்
Saturday, 25 January 2014 09:37
administrator
நாளிதழ்௧ள் -
ந௧ரம் மற்றும் மாந௧ரம்
தினத்தந்தி 25.01.2014 ஈரோடு மாநகராட்சியில் 5,675 குடும்பத்தினருக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார்
ஈரோடு மாநகராட்சியில் 5 ஆயிரத்து 675 குடும்பத்தினருக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார்.
மிக்சி வழங்கும் விழா
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட 38, 39, 40 மற்றும் 42-வது வார்டுகளை சேர்ந்த பொதுமக்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா சூரம்பட்டி ஜெகநாதபுரம் காலனி பகுதியில் நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் வி.கே.சண்முகம் தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் ரா.மனோகரன், காஞ்சனாபழனிச்சாமி, கேசவமூர்த்தி, முனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி ஆகியோர் பேசினார்கள். விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வாக்குறுதிகள்
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு ஒரு உறுதி அளித்தார். பெண்கள் கஷ்டப்படாமல் இருக்க விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி தருவேன் என்று கூறினார். அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார். ஆட்சியாளர்கள் பலரும் வாக்குறுதி அளிப்பார்கள். ஆனால் நிறைவேற்ற மாட்டார்கள்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2½ ஆண்டுகளில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறார். அவர் ஆட்சியில் இருப்பதால்தான் 20 கிலோ விலையில்லா அரிசி கிடைக்கிறது. அவர் ஆட்சியில் இருப்பதால்தான் 60 வயது கடந்த முதியோர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை கிடைக்கிறது. திருமண உதவித்தொகையும், தாலிக்கு தங்கமும் கிடைக்கிறது. அவர் ஆட்சியில் இருப்பதால்தான் இப்போது மிக்சி, கிரைண்டர், மின்விசிறி கிடைக்கிறது.
புறக்கணிப்பு
மத்திய அரசு அனைத்து விஷயங்களிலும் தமிழகத்தை புறக்கணிக்கிறது. அரிசி, மண்எண்ணை ஆகியவற்றை குறைவாக தருகிறது. பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் வகையில் பெட்ரோல் -டீசல் விலையை அன்றாடம் உயர்த்தி வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைத்து உள்ளது. இந்த விலை உயர்வுகளுக்கு எல்லாம் காரணம் மத்திய அரசுதான். ஒவ்வொரு விஷயத்திலும் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது. ஆனாலும் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தவறாமல் நிறைவேற்றி வருகிறார். அவருக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கூறினார்.
5,675 குடும்பங்கள்
மொத்தம் 5 ஆயிரத்து 675 குடும்பத்தினருக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி ஆகியவை வழங்கப்பட்டன.
விழாவில், சிந்தாமணி தலைவர் ஜெகதீசன், வக்பு வாரிய உறுப்பினர் எஸ்.ஏ.பாரூக், இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் மணிகண்டன், ஈரோடு தாசில்தார் சாகுல் அமீது, துணை தாசில்தார் ஜெயக்குமார் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
|
|