Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

ஈரோடு மாநகராட்சி பகுதியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு புகைப்படம் எடுக்கும் பணி இன்று தொடங்குகிறது

Print PDF

தினத்தந்தி             25.01.2014

ஈரோடு மாநகராட்சி பகுதியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு புகைப்படம் எடுக்கும் பணி இன்று தொடங்குகிறது

ஈரோடு மாநகராட்சி பகுதியில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு புகைப்படம் எடுக்கும் பணி இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.

புகைப்படம் எடுக்கும் பணி

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் முதல் கட்டமாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு புகைப்படம் எடுக்கும் பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்தது. பின்னர் 2-வது கட்டமாக புகைப்படம் எடுக்கும் பணி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தொடங்கி ஒவ்வொரு வார்டு வாரியாக நடந்து வருகிறது.

ஈரோடு மாநகராட்சி பழைய வார்டு எண் அடிப்படையில் 36-வது வார்டில் இருந்து 45-வது வார்டு வரை உள்ள பகுதியில் பொதுமக்களுக்கு புகைப்படம் எடுக்கும் பணி இன்று தொடங்குகிறது.

பழைய வார்டு எண் அடிப்படையில் புகைப்படம் எடுக்கும் பணி விவரம் வருமாறு:-

36-வது வார்டு

36-வது வார்டுக்கு உள்பட்ட ஜீவானந்தம் ரோடு, பெரும்பள்ளம் ஓடை குடிசைகள், ஜீவானந்தம் ரோடு குடிசை மாற்று வாரியம் ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

37-வது வார்டுக்கு உள்பட்ட ஈ.வி.என்.ரோடு, கருப்பண்ணன் வீதி, பெரியார் நகர் வீதி 1, 2, 3, 4, 5, 6, 7, 15, பெரியார் நகர் குடிசை மாற்று வாரியம், ராஜாக்காடு சந்து, ராஜாக்காடு வீதி 1, 2, 3 ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. பிரப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

38-வது வார்டுக்கு உள்பட்ட அண்ணா நகர் மெயின் ரோடு, அண்ணா நகர் குடிசைகள், அசோகபுரி, அசோகபுரி குடிசைகள், பெரியார் நகர், ஸ்டோனி பாலம் குடிசைகள் ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு ஈரோடு பெரியண்ண வீதி கலைமகள் கல்வி நிலையம் தொடக்கப்பள்ளியில் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

எஸ்.கே.சி. ரோடு

39-வது வார்டுக்கு உள்பட்ட தனக்கோடி லே அவுட், கருப்பண்ணசாமி கோவில் வீதி 1, 2, 3, 4, மாரப்பன் வீதி 1, 2, 3, ராஜரத்தினம் வீதி, எஸ்.கே.சி. மெயின் ரோடு, எஸ்.கே.சி. ரோடு 1, 2, 3, 4, 5, ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு ஈரோடு சூரம்பட்டி இந்து கல்வி நிலையம் பள்ளிக்கூடத்தில் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

40-வது வார்டுக்கு உள்பட்ட அவ்வையார் வீதி, தேவா வீதி, கிராமடை வீதி 1, 2, 3, 4, 5, 6, 7, லட்சுமணன் வீதி, சாந்தான் கருக்கு வீதி 1, 2, 3, 41-வது வார்டுக்கு உள்பட்ட ஈ.எம்.எம். மெயின் வீதி, ஈ.எம்.எம்.ரோடு 2, 3, பெருமாள் காடு, 42-வது வார்டுக்கு உள்பட்ட ஈஸ்வரன் வீதி, ஈ.வி.என்.ரோடு, காந்திஜி ரோடு, கள்ளியங்காடு குடிசைகள், பொய்யேரிக்கரை, பொய்யேரிக்கரை குடிசைகள் ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு ஈரோடு ஸ்டோனி பாலம் ஆதிதிராவிடர் ஆண்கள் விடுதியில் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

ஜீவானந்தம் ரோடு

43-வது வார்டுக்கு உள்பட்ட பாலசுப்பராயலு வீதி, கிழக்கு பட்டக்காரர் வீதி, ஜீவானந்தம் ரோடு, காதர்மொய்தீன் சந்து, காதர்மொய்தீன் வீதி, பழைய ரெயில் நிலையம் ரோடு, பட்டக்காரர் வீதி, ஷேக் தாவூத் வீதி, தங்க பெருமாள் வீதி ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு ஈரோடு ரெயில்வே காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் புகைப்படம் எடுக்கப்படுகிறது. 44-வது வார்டுக்கு உள்பட்ட எல்.ஐ.ஜி.எஸ். காலனி வீதி 1, 2, 3, ரெயில் காலனி ரோடு, 45-வது வார்டுக்கு உள்பட்ட ஈ.எம்.எம். மெயின் வீதி, ஈ.எம்.எம்.வீதி 1, 4, ரெயில்வே கூட்ஸ் செட் எதிர்புறம் உள்ள குடிசைகள், மணல்மேடு வீதி ஆகிய பகுதிகளுக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு ஈரோடு கொல்லம்பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் புகைப்படம் எடுக்கப்படுகிறது. இந்தப்பகுதிகளில் வருகிற 30-ந் தேதி வரை புகைப்படம் எடுக்கப்படுகிறது.

இந்த தகவலை மாநகராட்சி ஆணையாளர் மு.விஜயலட்சுமி தெரிவித்து உள்ளார்.

 

தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர், மேயராக பொறுப்பு ஏற்றார்

Print PDF

தினத்தந்தி             25.01.2014 

தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர், மேயராக பொறுப்பு ஏற்றார்

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் எல்.சசிகலா புஷ்பா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, துணை மேயர் சேவியர், மேயராக பொறுப்பு ஏற்றார்.

மேல்சபை வேட்பாளர்கள்

தூத்துக்குடி மாநகராட்சி மேயரும், மாநில மகளிர் அணி செயலாளருமான எல்.சசிகலா புஷ்பா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் என்.சின்னத்துரை ஆகியோர் டெல்லி மேல்சபை அ.தி.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தனர்.

அதற்கான கடிதத்தை மேயர் சசிகலா புஷ்பா, ஆணையாளர் மதுமதியிடம் கொடுத்தார். அதேபோல் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை, தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் கஸ்தூரியிடம் கொடுத்தார்.

மாநகராட்சி கூட்டம்


இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர்கள் அவசர கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு துணை மேயர் சேவியர் தலைமை தாங்கினார். அப்போது அவர், மேயர் அணியும் அங்கியை அணிந்து இருந்தார்.

கூட்டத்தில் துணை மேயர் சேவியர் பேசும்போது, “தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா டெல்லி மேல்-சபை வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதையொட்டி அவர் தனது பதவியை ராஜினா செய்துள்ளார். இந்த தகவல் கவுன்சிலர்கள் கூட்டத்தில் பதிவுக்கும் பார்வைக்கும் வைக்கப்படுகிறது“ என்றார்.

தொடர்ந்து ஆணையாளர் மதுமதி பேசும்போது, “மேயர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதால், துணை மேயர் சேவியர், மேயர் பொறுப்பு வகிப்பார்“ என்றார்.

இதைத்தொடர்ந்து கூட்டம் நிறைவடைந்தது.

பஞ்சாயத்து கூட்டம்

இதேபோல் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் பஞ்சாயத்து கூட்டம் நடந்தது. கூட்டத்தில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து பஞ்சாயத்து தலைவராக, துணை தலைவர் தெய்வேந்திரன் பொறுப்பு வகிக்கிறார்.

கூட்டத்தில் டெல்லி மேல் - சபை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சின்னத்துரையும் கலந்து கொண்டார். அவர், தன்னை டெல்லி மேல்-சபை வேட்பாளராக அறிவித்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

 

எளம்பிள்ளையில் திட, திரவ வள மேலாண்மைக் கருத்தரங்கம்

Print PDF

தினமணி             25.01.2014 

எளம்பிள்ளையில் திட, திரவ வள மேலாண்மைக் கருத்தரங்கம்

சேலம் மாவட்டம்,  எளம்பிள்ளை பேரூராட்சி சார்பில் திட, திரவ வள மேலாண்மைக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் பழனியம்மாள் தலைமை வகித்தார். எளம்பிள்ளை பேரூராட்சித் தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார்.

வேலூர் தொண்டு நிறுவன நிர்வாகி சீனிவாசன் பேரூராட்சிப் பகுதியில் உற்பத்தியாகும் பிளாஸ்டிக் திட, திரவக் கழிவுகளை பொதுமக்கள் பயனடையும் வகையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் தேவையற்ற பொருள்களை பாதிப்பில்லாமல் அழிப்பது குறித்தும் இந்தக் கருத்தரங்கில் விளக்கிக் கூறினார் .

பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன், பேரூராட்சிக் கவுன்சிலர்கள் முரளி, பலராமன், சீரங்கன், மகளிர் சுய உதவிக் குழுவினர், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர்.

 பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர்கள், துப்பரவு மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 41 of 841