Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி: பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

Print PDF

தினமணி            24.01.2014 

வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி: பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

போடி நகராட்சியில், தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி, வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

  போடி வட்டாட்சியர் அலுவலகத் தேர்தல் பிரிவு, போடி நகராட்சி ஆகியவை இணைந்து, தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தன.  உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சிவ. ஜானகி தலைமை வகித்து, பேரணியை தொடங்கிவைத்தார்.

  போடி வட்டாட்சியர் வீ. பழனிக்குமார், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பொறியாளர் ஆர். திருமலைவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில், போடி நகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்கள் வாக்காளர்களாக சேருவதன் அவசியம் பற்றியும், வாக்களிப்பதன் முக்கியத்துவம், வாக்களிப்பதன் மூலம் ஆற்றும் ஜனநாயகக் கடமைகள், வாக்காளர் அடையாள அட்டையின் பயன்கள் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி கோஷமிட்டவாறு சென்றனர்.

  பேரணியானது, போடி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, தேவர் சிலையில் நிறைவடைந்தது. இதில், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் அசோகன், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

 

ஜனவரி 30-இல் மாமன்றக் கூட்டம்

Print PDF

தினமணி            24.01.2014 

ஜனவரி 30-இல் மாமன்றக் கூட்டம்

சேலம் மாநகராட்சியின் மாமன்றக் இயல்புக் கூட்டம் ஜனவரி 30-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

சேலம் தொங்கும் பூங்கா வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள மாநகராட்சி அலுவலகத்தில் ஜனவரி 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு இந்தக் கூட்டம் தொடங்குகிறது.

கூட்டத்துக்கு, மேயர் எஸ்.செüண்டப்பன் தலைமை வகிக்கிறார். ஆணையர் மா.அசோகன் முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில், உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

 

வாக்காளர் தின பேரணி

Print PDF

தினகரன்            24.01.2014 

வாக்காளர் தின பேரணி

போடி, : போடி நகராட்சி சார்பில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவர்களின் பேரணி நடைபெற்றது. இதில் நகராட்சி பள்ளியைச் சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் கலந்து கொண்டனர். பேரணியை உத்தமபாளையம் ஆர்டிஓ ஜானகி தலைமை வகித்து கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி நகராட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று புதிய பஸ்ஸ்டாண்டை அடைந்தது.

பேரணியில் தாசில்தார் பழனிகுமார், நகராட்சி ஆணையாளர் சசிகலா, பொறியாளர்கள் குணா, திருமலைவாசன், கருப்பணன் மற்றும் முத்தையா, ஆண்டவர், செந்தில், பாலமுருகன், வனராஜ், கற்பகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 42 of 841