Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினகரன்            24.01.2014  

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர், : திருப்பூர் மாநகராட்சியில் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.

திருப்பூர் வடக்கு, தெற்கு சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு மனிதச் சங்கிலி பேரணி நேற்று நடந்தது. பேரணியை, மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மாவட்ட வருவாய் அலுவலர் பாரிவேல் தொடங்கி வைத்தார். இப்பேரணி மாநகராட்சிப் பூங்கா வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்பூர் ஆர்.டி.ஓ.பழனிக்குமார், தெற்கு தாசில்தார் பூபதி, உதவி கமிஷனர் செல்வநாயகம், தேர்தல் துணை தாசில்தார்கள் சுப்பிரமணியம், விவேகானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டி

Print PDF

தினகரன்            24.01.2014

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டி

துவரங்குறிச்சி, : பொன்னம்பட்டி பேரூராட்சி துவரங்குறிச்சியில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.

துவரங்குறிச்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், பொன்னம்பட்டி பேரூ. தலைவர் அப்துல்மாலிக் தலைமையில், துணைத் தலைவர் மதியழகன் முன்னிலையில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் சிறுவர் மற்றும் சிறுமியர்கள் பங்கேற்ற ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், செஸ் போட்டி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு விளையாட்டு பொருட்கள், திருக்குறள் புத்தகம் மற்றும் பாடப் புத்தகங்கள் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பொன்னம்பட்டி பேரூ. செயல் அலுவலர் சோமசுந்தரம், பேரூ. வார்டு உறுப்பினர்கள் பிச்சையம்மாள், பாலகிருஷ்ணன், வீரைய்யா, சர்புனிசாபீவி, ராமசாமி, பீர்சுல்தான், அப்துல்காலிக், அப்துல்மாலிக், ஜரினாபேகம், பூங்கோதை, பழனியம்மாள், பாலு, வல்லான், ரேவதி மற்றும் பேரூ. பணியாளர் அழகேந்திரன், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொட்டியம்: தொட்டியம் பேரூராட்சி சார்பில் வாக்காளர் தினவிழாவை விழிப்புணர்வு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

தொட்டியம் பேரூராட்சியில் பல்வேறு இடங்களில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

தொட்டியம் பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தார். துணைத் தலைவர் ஐயப்பன், செயல் அலுவலர் சித்ரா, கவுன்சிலர்கள் கவியரசன், சீனிவாசன், ரமேஷ், ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி வார்டுகளில் நடந்த விளையாட்டு போட்டிகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் ஐயப்பன் ஆகியோர் பரிசு வழங்கினர். அலுவலக பணியாளர் சம்பத் நன்றி கூறினார்.

 

183வது வார்டில் 5,000 பேருக்கு இலவச மிக்சி

Print PDF

தினகரன்            24.01.2014

183வது வார்டில் 5,000 பேருக்கு இலவச மிக்சி


வேளச்சேரி, :  மாநகராட்சி 183வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இலவச மிக்சி வழங்கும் நிகழ்ச்சி கொட்டிவாக்கம் ஒம்எம்சிஏ பள்ளியில் நடந்தது. மண்டல குழு தலைவர் ராஜாராம் தலைமை வகித்தார். தாசில்தார் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

அமைச்சர் சின்னையா கலந்துகொண்டு 5000 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை வழங்கினார். சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் எம்பி, கே.பி.கந்தன் எம்எல்ஏ, பரங்கிமலை ஒன்றிய குழு தலைவர் கிருஷ்ணன், மாநகராட்சி நிலைக்குழு தலைவர் முனுசாமி, மண்டல குழு தலைவர் லியோ சுந்தரம், ஒன்றிய அதிமுக செய லாளர் டி.வி.நாராயணன், கொட்டிவாக்கம் கிளை செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 43 of 841