Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

சென்னைக்கு புதிய திட்டம்: மாநகராட்சி கூட்டத்தில் ஜெயலலிதாவுக்கு பாராட்டு

Print PDF

மாலை மலர்              24.01.2014

சென்னைக்கு புதிய திட்டம்: மாநகராட்சி கூட்டத்தில் ஜெயலலிதாவுக்கு பாராட்டு
 
சென்னைக்கு புதிய திட்டம்: மாநகராட்சி கூட்டத்தில் ஜெயலலிதாவுக்கு பாராட்டு
சென்னை, ஜன. 24 - சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:–

பொங்கல் திருநாளில் மக்கள் நலன் கருதி தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 13 ஆயிரத்து 87 பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னை மற்றும் புறநகர் மக்கள் பயன் பெறும் வகையில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதன் மூலம் தமிழ்நாட்டில் 3.39 கோடி மக்கள் நேரடியாக பயன் பெற்றனர். அதாவது தமிழக மக்கள் தொகையில் 46.95 சதவீதம் பேர் பயன் பெற்றுள்ளனர். இதற்கு உத்தரவிட்ட முதல்– அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு.

சென்னையின் இதய பகுதி போல் உள்ள 15 ஏக்கர் பரப்புடைய சேத்துப்பட்டு ஏரியை மக்கள் பயன்பெறும் வகையில் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய பசுமை பூங்காவாக புனரமைக்க முதல்– அமைச்சர் ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார்.

இதற்காக ரூ. 42 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதன் மூலம் சேத்துப்பட்டு ஏரி வருங்காலத்தில் சிறந்த சுற்றுலா மையமாக மாறும். மழைநீர் சேகரிப்பு உள்பட பல்வேறு பயன்கள் கிடைக்கும். இந்த திட்டத்தை அறிவித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி.

நேரு விளையாட்டரங்கம் உள்பட பிற மாவட்டங்களையும் சேர்ந்து 17 இடங்களில் உடற்பயிற்சி கூடம் அமைக்கவும், உபகரணம் வாங்கவும் முதல்– அமைச்சர் ஜெயலலிதா ரூ. 4 கோடியே 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

மேலும் உலக கபடி போட்டி நடத்த ரூ. 1 கோடியும், ஸ்குவாஷ் போட்டி நடத்த ரூ. 75 லட்சமும் வழங்கியுள்ள முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி கலந்த பாராட்டு.

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளுக்கு பாராட்டு.

தமிழ்நாட்டில் ஊராட்சிகளின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உத்தரவிட்டுள்ள முதல்– அமைச்சர் ஜெயலலிதாவை இந்த மாமன்றம் பாராட்டுகிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

கீழப்பாவூர் பேரூராட்சியில் கைத்தறி தின விழா

Print PDF

தினகரன்             23.01.2014 

கீழப்பாவூர் பேரூராட்சியில் கைத்தறி தின விழா

பாவூர்சத்திரம், : நெல்லை மாவட்ட கலெக் டர் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் கைத்தறி தின விழா நடந்தது.

அனைத்து அரசு ஊழியர்கள் கதர் வேட்டி, சட்டை அணிந்து பணிக்கு வந்தனர்.   கீழப் பாவூர் பேரூராட்சியில் தலைவர் பொன்அறிவழகன் தலைமையில் பணியாளர் கள் கைத்தறி தினவிழா கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் செயல் அலு வலர் விஜயகுமார், துணை தலைவர் தங்கச்சாமி, வட்டார காங். தலைவர் சுப்பிரமணியன், அலுவலக பணியாளர்கள் தனுஷ் கோடி, தர்மராஜ், சிவ னனைந்தபெருமாள், ஜவஹர், ஜஸ்டின் திர வியம், ராமர், முத்துசாமி, முருகன், தங்க ராஜ், சுப்புலட்சுமி, திருமலை வடிவு அம்மாள், துப்புரவு பணியாளர்கள் செல்வன், தியாகராஜன், முருகன், செல்லப்பா, ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி

Print PDF

தினகரன்             23.01.2014 

வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி

அனுப்பர்பாளையம், : திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு மாநகராட்சி முதலாவது மண்டல அலுவலகத்தில் தேர்தல் கமிஷன் அறிவுறுத்தலின் பேரில்,  புத்தாக்கப்பயிற்சி  திருப்பூர் மாநகராட்சி வேலம்பாளையம் மண்டல அலுவலக உதவி ஆணையர் ஷபியுல்லா தலைமையில் நடைபெற்றது.

இதில், சுப்பையா மெட்ரிக் பள்ளி, சந்திரகாவி நடுநிலைப்பள்ளி, பாரதிநகர் மெட்ரிக் பள்ளி, பிரேமா மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் இருந்து 70 க்கும் மேற்ப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் தாசில்தார் சுப்பிரமணியம் அனைவருக்கும் பயிற்சியளித்தார். இதில், தேர்தல் பணியாற்றுவோரின் கடமை, வாக்குச்சாவடி செயல்பாடு, வாக்குப்பதிவு, வாக்குப்பதிவானதும் வாக்கு மெஷின்களை சீல்வைப்பது ஆகியன குறித்து விளக்கப்பட்டது. மேலும், வரும் 25ல் வாக்காளர் தினத்தை எவ்வாறு கொண்டாடுவது என்பன குறித்தும் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இதே போல அவினாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான பயிற்சி முகாம், குலாலர் திருமண மன்டபத்தில் தாசில்தார் தேவமனோகரன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தாசில்தார் கோபாலகிருஷ்ணன் பயிற்சியளித்தார். இதில் 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

 


Page 44 of 841