Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

பழநி நகரில் ரூ.98 லட்சத்தில் வளர்ச்சி பணி நகராட்சி தலைவர் தகவல்

Print PDF

தினகரன்             23.01.2014 

பழநி நகரில் ரூ.98 லட்சத்தில் வளர்ச்சி பணி நகராட்சி தலைவர் தகவல்

பழநி, : பழநி நகரில் ரூ.98 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக நக ராட்சி தலைவர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

பழநி நகராட்சிக்குட்பட்ட இடும்பன் இட்டேரி குறுக்கு தெருவில் பிற்படுத்தப்பட்ட மானிய நிதி 2013 -14ன் கீழ் ரூ.15 லட்சம் மதி ப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது.

இதுபோன்று காமரா ஜர் வீதியில் ரூ.2 லட்சம், ராஜா நகரில் ரூ.9 லட்சம், ஆவணி மூலவீதி மற்றும் அரசு மருத்துவமனை பகுதி யில் ரூ.3.50 லட்சம் மதிப் பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது.

மாசிமலை சந்தில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு மற்றும் சின்டெக்ஸ் தொட்டி,  ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் ஜீவானந்தம் சாலையில் வடிகால், ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் தேவேந்திரன் தெருவில் மழைநீர் வடி கால், ரூ.2 லட்சம் மதிப்பீட் டில் இந்திரா நகர் மேற்கு பகுதியில் வடிகால் மற்றும் பாலம் அமைக்கப்பட உள்ளது.

ரூ.10.50 லட்சம் மதிப்பீட்டில் ரயிலடி சாலை, சித்தனாதன் தெரு, சுகதேவ் வீதி, கவுண்டர் இட்டேரி சாலைகளில் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கப்பட உள்ளது.

ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் மங்களகவுண்டர் சந்து, மதனபுரம் குறுக்கு தெருவில் மழைநீர் வடிகால், ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் 24வது வார்டில் கழிவறை மராமத்து,

ரூ.2 லட்சம் மதிப்பீட் டில் லயன் கிளப் சாலையில் சிறுபாலம் மற்றும் மழைநீர் வடிகால், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கவுண்டர் இட்டேரி வார சந்தை சாலையில் தார் தளம், ரூ.9.95 லட்சம் மதிப் பீட்டில் நகராட்சி அலுவலகம் மராமத்து பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதுதவிர நகராட்சியின் பிற பகுதிகளில் மழைநீர் வடிகால், சாக்கடை அமை த்தல், ஆழ்குழாய் கிணறு என மொத்தம் ரூ.98 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

நகர்மன்ற ஒப்புதலுக்குப்பின், டெண் டர் விடப்பட்டு பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக நகராட்சி தலைவர் வேலு மணி தெரிவித்துள்ளார்.

 

அலுவலர்களுக்கு பயிற்சி

Print PDF

தினகரன்             23.01.2014 

அலுவலர்களுக்கு பயிற்சி

தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதியில் 72 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இம்மையங்களில் 72 வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேனியில் நேற்று பயிற்சி முகாம் நடந்தது. இதில் நகராட்சி ஆணையர் ராஜாராம் தலைமை வகித்து பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். இதில், நகராட்சி மேலாளர் சத்யசீலா, சுகாதார அலுவலர் சுருளிநாதன், நகராட்சி தேர்தல் பிரிவு உதவியாளர் ராஜா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

 

கோவை மாநகராட்சியில் இன்று முதல் அம்மா திட்ட சிறப்பு முகாம்

Print PDF

தினமணி             22.01.2014

கோவை மாநகராட்சியில் இன்று முதல் அம்மா திட்ட சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் புதன்கிழமை முதல் அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

  இது தொடர்பாக மேயர் செ.ம. வேலுசாமி வெளியிட்ட அறிக்கை: கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் புதன்கிழமை (ஜன 22) முதல் கீழ்க்காணும்  நாட்களில் குறிப்பிட்டுள்ள இடங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மாநகர மக்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

  இம்முகாம்களில் பெயர், கதவு எண், தெருவின் பெயர் மற்றும்  கேட்பு முதலிய திருத்தங்கள் மேற்கொள்ளுதல், புதிய சொத்துவரி மற்றும்  கேட்பு அட்டை மற்றும் குடிநீர் கேட்பு அட்டை வழங்கல், விடுபட்ட சொத்துவரி, குடிநீர் இணைப்பு பதிவு செய்தல்  தொடர்பான இதர பணிகள், தொழில்வரி இனங்கள், புதிய இனங்கள்  பதிவு செய்தல், திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பான இதர பணிகளுக்கு  உடனடி தீர்வு காணப்படும்.

  கிழக்கு மண்டலம் விளாங்குறிச்சி  காமாட்சியம்மன்  கல்யாண மண்டபத்தில் 32-ஆவது வார்டிலும் மேற்கு மண்டலம் கவுண்டபாளையம்  வார்டு அலுவலகத்தில் 5,6,7,8,9 ஆகிய வார்டுகளுக்கும், குனியமுது;தூரில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் 87, 88,91,92,93 ஆகிய வார்டுகளுக்கும், வடக்கு மண்டலம் துடியலூர் வார்டு அலுவலகத்தில் 1,2,3,4 ஆகிய வார்டுகளுக்கும், ஒசூர் சாலையில் உள்ள மத்திய மண்டல அலவலகத்தில் 25,72,73,74 ஆகிய வார்டுகளுக்கும் மாநகராட்சி அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும்.

  ஜனவரி 27-ஆம் தேதி கிழக்குமண்டலம்  வரதராஜபுரம் ஜே.ஜே.கல்யாண மண்டபத்தில் 37,56,57,64,65,66 ஆகிய வார்டுகளுக்கும், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள  மேற்கு மண்டல அலுவலகத்தில் 10,22,23,24 ஆகிய வார்டுகளுக்கும், தெற்கு மண்டலம் நாகப்பிள்ளையார்  கோவில் பின்புறம் உள்ள நூலக கட்டடத்தில் 89,90  ஆகிய வார்டுகளுக்கும்  வடக்கு மண்டலம் சின்னவேடம்பட்டி  வார்டு  அலுவலகத்தில் 27,42 ஆகிய வார்டுகளுக்கும்   மத்திய மண்டலம் ரத்தினபுரி மாநகராட்சி உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் 45,48,49 ஆகிய வார்டுகளுக்கும் மாநகராட்சி அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும்.

  பிப். 1-ஆம் தேதி  சிங்காநல்லூர் கிழக்கு மண்டல அலுவலகத்தில்  58,59,60,61,62,63 ஆகிய வார்டுகளுக்கும்,  மேற்கு மண்டலம்  பி.என்.புதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில்  15,20,21 ஆகிய வார்டுகளுக்கும்  தெற்கு மண்டலம் செல்வபுரம் வார்டு அலுவலகத்தில்  76,77,78,85 மற்றும் 86 ஆகிய வார்டு மக்களுக்கும் வடக்கு மண்டலம் வெள்ளகிணறு வார்டு அலுவலகத்தில் 26,43 ஆகிய வார்டுகளுக்கும்   மத்திய மண்டலம் வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 50,51,52,53,54 ஆகிய வார்டுகளுக்கும் மாநகராட்சி அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும்.

 பிப். 5 ஆம் தேதி  கிழக்கு மண்டலம் இராமகிருஷ்ணாபுரம் மருதூர் கல்யாண மண்டபத்தில்  67,69,75 ஆகிய வார்டுகளுக்கும், மேற்கு மண்டலம்  மணியம் வேலப்பன் வீதி மாநகராட்சி ஆரம்பபள்ளியில்  11,12,13,14 ஆகிய வார்டுகளுக்கும், தெற்கு மண்டலம் பொன்னையராஜபுரம்  வார்டு அலுவலகத்தில்  79வது வார்டு மக்களுக்கும் வடக்கு மண்டலம்  சரவணம்பட்டி  வார்டு அலுவலகத்தில் 28,29,30,31 ஆகிய வார்டுகளுக்கும் மத்திய மண்டலம் புலியகுளம் மாநகராட்சி  ஆரம்பப்பள்ளியில் 68,70,71 ஆகிய வார்டுகளுக்கும் மாநகராட்சி அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும்.

  பிப். 8-ஆம் தேதி  கிழக்கு மண்டலம் காளப்பட்டி  வார்டு அலுவலகத்தில் 33,34,35,36 ஆகிய வார்டுகளுக்கும், மேற்கு மண்டலம் வடவள்ளி  வரிவசூல்  மையத்தில் 16,17 ஆகிய வார்டுகளுக்கும் தெற்கு மண்டலம் சுந்தராபுரம் தக்காளி மார்க்கெட்டில் 94,96,97,98 மற்றும்  100 (பகுதி) ஆகிய வார்டுகளுக்கும் வடக்கு மண்டலம் சக்தி ரோடு எம்.எஸ. ஆர்  டேங்கில்  41வது வார்டுக்கும், மத்திய மண்டலம்  பவளம் வீதி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் 80,81,82,83,84 ஆகிய வார்டுகளுக்கும் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும.

 பிப்.10-ஆம் தேதி மேற்கு மண்டலம் வீரகேரளம் வரிவசூல் மையத்தில்  18,19 ஆகிய வார்டுகளுக்கும் தெற்கு மண்டலம் சத்திரம் வீதியில் உள்ள  குறிச்சி வார்டு அலுவகத்தில் 95,99 மற்றும் 100 (பகுதி) ஆகிய வார்டுகளுக்கும் வடக்கு மண்டலம் கணபதி கணேஷ் லே-அவுட்  மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் 44,46,47 ஆகிய வார்டுகளுக்கும் மாநகராட்சி அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறும்.

 பிப். 15-ஆம் தேதி வடக்கு மண்டலம் பாப்பநாயக்கன்பாளையம்  பொறியியல் பிரிவு அலுவலகத்தில்  40,55 ஆகிய வார்டுகளுக்கும் பிப். 20-ஆம் தேதி  வடக்கு மண்டலம் பயனீர் மில்ஸ் ரோடு பொறியியல்  பிரிவு  அலுவலகத்தில் 38, 39 ஆகிய வார்டுகளுக்கும்  மாநகராட்சி அம்மா திட்ட சிறப்பு முகாம்கள்  நடைபெறும்.

 


Page 45 of 841