Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Towns and Cities

மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Print PDF

தினத்தந்தி            31.12.2013

மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் ஜெயா தலைமை தாங்கினார். பொதுமக்களிடம் இருந்து 12 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பார்வையிட்ட மேயர், மாநகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பழுதடைந்த தெருவிளக்குகளை பழுதுநீக்கம் செய்திடவும், சாக்கடைகளை தூர் வாரவும், கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், நகரப்பொறியாளர் சந்திரன், செயற்பொறியாளர்கள் அருணாசலம், நாகேஸ், நகர்நல அலுவலர் மாரியப்பன், உதவி ஆணையர்கள் தனபாலன், தயாநிதி, பிரபுகுமார்ஜோசப், உதவி செயற்பொறியாளர்கள் பாலகுருநாதன், அமுதவள்ளி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட கூட்டம்

Print PDF

தினத்தந்தி             31.12.2013

திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட கூட்டம்

திருச்சி மாநகராட்சியின் அரியமங்கலம் கோட்ட கூட்டம் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் உறுப்பினர் மகாலட்சுமி மலையப்பன் பேசுகையில், காளியம்மன் கோவில் அருகில் உள்ள தரைப்பாலம் மிகவும் தாழ்வாக உள்ளதால் கழிவுநீர் செல்வதில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. எனவே அந்த பாலத்தை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

உறுப்பினர் மண்டி சேகர், தனது வார்டில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய வேண்டும் என்றும், உறுப்பினர் அன்புலட்சுமி, தெற்கு உக்கடை பகுதியில் புதிததாக தார்ச்சாலை அமைக் கவேண்டும் என்றும், உறுப்பினர் ரவிசங்கர் தனது வார்டில் கட்டி முடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள்.

பின்னர் தலைவர் சீனிவாசன் பேசுகையில் "அரியமங்கலம் கோட்டத்தை சேர்ந்த 18 வார்டுகளிலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கொசு மருந்து அடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாய்களை பிடிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். உறுப்பினர்கள் முஸ்தபா, கயல்விழி சேகர், லீலாவேலு ஆகியோரும் தங்களது வார்டு பிரச்சினைகள் பற்றி பேசினார்கள்.

 

4,448 பயனாளிகளுக்கு ரூ. 2.59 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

Print PDF

தினமணி              30.12.2013

4,448 பயனாளிகளுக்கு ரூ. 2.59 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சி, சூலக்கல் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்ற விழாவில் 4,448 பயனாளிகளுக்கு ரூ. 2.59 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வேளாண்மைத் துறை அமைச்சர் செ.தாமோதரன் வழங்கினார்.

கோவையை அடுத்த ஒத்தக்கால்மண்டம் பேரூராட்சி பகுதியில் முதல்வரின் சிறப்புத் திட்டத்தின் கீழ் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா, அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், 3,324 பயனாளிகளுக்கு ரூ. 1.26 கோடி மதிப்பிலான விலையில்லா மிக்ஸி,

கிரைண்டர், மின் விசிறிகள், 179 மாணவ மாணவிகளுக்கு ரூ. 25 லட்சம் மதிப்பிலான மடிக் கணினிகள், 170 பயனாளிகளுக்கு ரூ. 77 லட்சம் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்கள், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 3,709 பயனாளிகளுக்கு ரூ. 2.28 லட்சம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செ.தாமோதரன் வழங்கினார்.

இதேபோல, கிணத்துக்கடவு வட்டம், சூலக்கல் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் 777 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை அமைச்சர் வழங்கினார். மேலும், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விபத்து நிவாரண உதவித் தொகையாக இரண்டு பயனாளிகளுக்கு ரூ. 2.5 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

இத்துடன், பொள்ளாச்சி எம்.பி. நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

விழாவில், பொள்ளாச்சி எம்.பி. சுகுமார், எம்எல்ஏ-க்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.கே.முத்துக்கருப்பண்ணசாமி, ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சித் தலைவர் மகாலிங்கம், துணைத் தலைவர் மகேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.

 


Page 59 of 841